சூரியாள்

Monday, January 09, 2006
தாகம் தீர்க்கும் மணல்கள்

தாகம் தீர்க்கும் மணல்கள்

விடிகின்ற பொழுதொன்றில்
சேவல்களாய் கூவிய
இந்திரன்கள் திகைக்க
கமண்டலமிருந்து கை ஊற்றிய நீர்
தெளிக்கத் தேடிய ஜடப் பொருள்
காணாது கௌதமனும் சிலையாக

தின்று விடவும்
சாபத்தினால் உறைய விடவும்
நீங்கள் தீர்மானித்திருந்த
நானென்ற
என் உடல்தனை அறுத்து கூறிட்டு
திசையெங்கும் எரிய
சூனியத்தில் திரிந்தலைகின்றன

உடலில்லா எனை
தழுவ முடியாது இந்திரன்களும்
தலை சீவ முடியாது பரசு ராமன்களும்
சாபமிட முடியாது கௌதமன்களும் இருக்க

சேவல்களால் கூவாத பொழுதிலும்
சூரியன்கள் உதிக்காத தருணங்களிலும்
எனக்கான விடியல்கள் உதயமாகின்றன

ஆறுகள்
சாபமேற்ற அகலிகைகளால் நிரம்பியும்
நீர்கள் எல்லாம்
பரசுராமன் வெட்டித் தீர்த்த
உடல்கள் மிதந்தலைய
தீரப் போவதில்லை உங்கள் தாகங்கள்

வெளியெங்கும் என் காதல்கள்
நானே தீர்மானித்தாலொழிய
பானைகளாகாது சிதறிக் கிடக்க

ஒப்பீடுகள் தொலைத்து
உணர முடிந்த கணமொன்றில்
உடலாக மட்டுமல்லாது
இயற்கையின் எல்லாமாகி
மணல்களும்
நீர் சுமக்கும் பானையாகி
தாகம் தீர்க்கும் அதிசயம் காண்பாய்
posted by mathibama.blogspot.com @ 1/09/2006 11:20:00 pm  
3 Comments:
  • At Tuesday, January 10, 2006 10:07:00 am, Blogger J S Gnanasekar said…

    "இனிமுடியாதுன்னால் கருவறுக்க" கவிதையும், இக்கவிதையும் நன்றாக இருந்தன, முழுதாய்ப் பொருள் புரியாவிட்டாலும். நன்றி.

    -ஞானசேகர்

     
  • At Tuesday, January 10, 2006 2:16:00 pm, Blogger நளாயினி said…

    "நீர்
    தெளிக்கத் தேடிய ஜடப் பொருள்
    காணாது கௌதமனும் சிலையாக

    நீங்கள் தீர்மானித்திருந்த
    நானென்ற
    என் உடல்தனை அறுத்து கூறிட்டு
    திசையெங்கும் எரிய
    சூனியத்தில் திரிந்தலைகின்றன

    சேவல்களால் கூவாத பொழுதிலும்
    சூரியன்கள் உதிக்காத தருணங்களிலும்
    எனக்கான விடியல்கள் உதயமாகின்றன

    தீரப் போவதில்லை உங்கள் தாகங்கள்


    என் காதல்கள்
    நானே தீர்மானித்தாலொழிய
    பானைகளாகாது சிதறிக் கிடக்க

    ஒப்பீடுகள் தொலைத்து
    உணர முடிந்த கணமொன்றில்

    மணல்களும்
    நீர் சுமக்கும் பானையாகி
    தாகம் தீர்க்கும் அதிசயம் காண்பாய் "

    பாராட்டுக்கள்.

     
  • At Tuesday, January 10, 2006 6:16:00 pm, Blogger mathibama.blogspot.com said…

    நன்றி இருவருக்கும்

     

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates