சூரியாள்

Saturday, February 11, 2012
அரிவாள் அய்யனார்

அரிவாள் அய்யனார்

முதுமையின் தனிமை பயம்
கருமை கழியும்
அவள் வெண் நரை போல்
வளர்ந்து கொண்டேயிருக்கிறது
அரசாண்ட கால நினைவுகள்
ஊன்று கோலாகிட
அதை அழுத்திப் பிடித்து
பயத்தை மறைத்த படியே
மீசை முறுக்குகிறார் அப்பா

சிறகுக்குள் மறைந்த
குஞ்சுகளின் கதகதப்புக்காய்
உதிர்ந்து கிடக்கும்
பாட்டியின் அனுபவச் சிறகை
எரிக்கத் தொடங்குகிறாள் அம்மா

புலிக் குத்தி படையலில்
வந்து சேராத சாப்பாட்டிற்கு
சண்டையடிக்கக் கூட மறந்து
பழங்காலங்களை பேசிச்
சிரித்து மறைக்குது நிகழ் முதுமை

பறிபோகுமென்ற பயத்தில் தான்
அரிவாள் தூக்கி
சிலையானாரோ அய்யனாரும்
 நன்றி : ” குறி “இதழ்
posted by Thilagabama Mahendrasekar @ 2/11/2012 10:53:00 AM   0 comments
Monday, February 06, 2012
இலங்கை பயணம் 13.2.12-19.2.12




posted by Thilagabama Mahendrasekar @ 2/06/2012 09:32:00 PM   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates