சூரியாள்

Saturday, March 06, 2021

காரைக்கால் அம்மையோடு உறங்குபவள்


 காரைக்கால் அம்மையே

பேயாய் அலையும் உன்னை

கட்டிக் கொண்டு உறங்குகிறேன்


இரு மாங்கனி பெற்ற 

தேவதையை கையேந்த முடியாது

நழுவவிட்ட பரமதத்தனாய்

இங்கும் ஏகப் பட்ட பரமதத்தன்கள்


பரமதத்தன் நழுவ விட்டதற்கு 

பேயாய் மாறிப் போன புனிதவதிகள்


யாருக்காகவும் சதை உருகாது

ஆளுமையின் சுவையில்

மாங்கனிகள் பெற்றவளே


காதலிக்காத பரம தத்தன்களுக்காகவும்

அணைத்திடாத சிவனுக்கும்

ஏன் தலைகீழாய் நடக்கிறாய்


உன் மாங்கனிகளை

கடற்கரை காற்றில்

உயிர்த்தபடி  பெறுகிறேன்

தொலையட்டும் பேய் வாழ்வு

சுவைக்கட்டும் காதலும் காமமும்


posted by mathibama.blogspot.com @ 3/06/2021 11:47:00 am   0 comments
Wednesday, April 15, 2015
போலிக் கவலைக்கு பொய்க்கணக்கு
இவர்கள் இன்ன செய்கிறோமென்று அறியாதவர்கள்
போலிக் கவலைக்கு பொய்க்கணக்கு
திலகபாமா
10ம் தேதி ஏப்ரல் மாதம் பொன்னம்மாள் அவர்களை அழகம் பட்டியில் அவரது இல்லத்தில்  கக்கன் பற்றிய ஆவணப் படத்திற்காக சந்தித்துவிட்டு வந்த பிறகு அவர்கள் சட்டமன்றத்தில் என்னவெல்லாம் கேள்விகள் கேட்டு மக்களுக்கான விசயங்களை செய்து முடித்தார்கள் என்று சொல்லியதை நினைக்கையில் என் தொகுதி எம்.எல்.ஏ என்னவாக இருக்கின்றார். இதுவரை சட்டசபையில் என்ன என்ன தொகுதிக்காக கேட்டு வாங்கியிருக்கின்றார் என்ற கேள்விகள் முளைத்தன. இன்று அவர் வகிக்கும் பொறுப்பு செய்தி மற்றும் விளம்பரத்துறை. மக்களுக்காக வேலை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் செய்தி மற்றும் விளம்பரம் செய்வதற்காக பொறுப்பேற்று என்ன செய்தியை சொல்லிவிடப் போகின்றார். அல்லது அரசின் செய்தி மற்றும் விளம்பரத்திற்கான வேலைகளைச் செய்யவா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைச் செய்ய ஏதாவதொரு அதிகாரிகளை அரசு நியமித்துக் கொண்டால் போதாதா. தொகுதிக்கான பணிகளைச் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அமைச்சர் பொறுப்பு ஏற்கும் போதும் அரசு நிர்வாகம் மக்களுக்காக பயன்படும் பாலமாக இருப்பாரா அல்லது அரசின் விளம்பரத்துறை நிர்வாக வேலைகளைக் கவனிக்கவா.
யாரும் கேள்வி கேட்கக் கூடத் தோன்றாமல் புதிது புதிதாய் துறைகளை அறிமுகப்படுத்தி பதவிகள் வழங்கி கட்சியாளர்களை சந்தோசப்படுத்த நினைக்கின்ற அரசியல் கட்சிகள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே தொடர்ந்து மக்களுக்கு தேவையான பணிகளுக்கு துறை அமைப்பதை விடுத்து ஏதாவது ஒரு துறை அமைத்தால் போதும் என முடிவுக்கு வந்து விட்டனரோ.
காமராசரிடம் ஒரு முறை சிலர் போய் கேட்டிருக்கின்றார் அரசு இதுவரை செய்த திட்டங்களை  மக்களுக்கு சொல்லனும் அதற்கு ஒரு படம் எடுக்கலாம் என்று
எவ்வளவு செலவாகும் என்று கேட்ட காமராசர் அவர்கள் செலவுத் தொகையைச் சொன்னதும் சொன்னாராம் இவ்வளவு தொகை இருந்தால் இன்னும் பல பள்ளிக் கூடங்களை கட்டி விடுவேன் அரசு என்ன செய்தது என்பது மக்களுக்குத் தெரியும் என்றாராம்.
ஆனால் இன்றோ மந்திரிகள் மண்சோறு சாப்பிடுவதை எப்படி வழிகாட்டும் மக்களின் முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்வது என்றே கவலைப்பட்ட படியும், தீர்ப்பு வருவதற்குள் இன்னும் புதிது புதிதாய் எத்தனை வேண்டுதல்களை செய்ய வேண்டி வருமோ என்று கலங்கியபடியும் இருக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சி நிர்வாகிகள், மந்திரிகள், சாதாரண தொண்டன் என்று எந்த வேறுபாடும் இன்றி போலிக் கவலைக்கு பொய்க்கணக்கு எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.
இப்படி நடந்தவற்றில் ஒரு நல்ல விசயம் என்ன தெரியுமா? முன்பெல்லாம் கடைசி தொண்டன் மொட்டைபோடுவான், அலகு குத்துவான். இன்று வேறுபாடில்லாமல் மந்திரிகள் 1008 தேங்காய் உடைக்கிறார்கள், மண்சோறு சாப்பிடுவதாய் படம் பிடித்துக் கொள்கிறார்கள்.
இனி வருகின்ற பங்குனி, சித்திரை, வைகாசி திருவிழாக்கலெல்லாம் வழிகாட்டு மக்களின் முதல்வருக்கான வேண்டுதலாய் மாறி தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும்.
நாமும் சிப்ஸ் கொறித்தபடி பார்த்து சிரித்துக் கொள்வோம்.
மக்களும் நாம் எதற்கு இவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பினோம் என்பதை மறந்து எங்களது சட்டமன்ற உறுப்பினர் மந்திரியானதற்கு மகிழ்ந்து ஏதாவது எச்சில் கையை உதரிவிட மாட்டார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம் அரசு அதிகாரிகளாய் மக்கள் தேர்ந்தெடுத்த மந்திரிகள் மாறிப்போனதை கேள்வி கேட்க மறந்தும் போய் விட்டோம் 
பாவம் மக்கள் முதல்  மந்திரிகள் வரை  இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்.


posted by mathibama.blogspot.com @ 4/15/2015 11:35:00 pm   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates