மிக நீளமான கோட்டை
மிகப்பெரிய அழிவை சந்தித்த கோட்டை. உள்நுழைந்தவுடன் 9 மாடி கொண்ட வெற்றிக் கோபுரம் ஓர் உயர குத்துவிளக்கால் நமை வரவேற்கின்றது. தலையை விட பெரிதாய் தலைப்பாகை அணிந்த ஆண்கள். முகத்தில் பாதி மறைக்கும் மூக்குத்தி அணிந்த உள்ளூர் பெண்கள் நம்மை கவர்ந்திருக்கின்றனர்.
வெட்கப்படும் அவர்களோடு நின்று படம் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு இடிபாடுகளுக்கிடையில் காலம் தாண்டி நின்று கொண்டிருக்கும் கட்டிடங்களை அனுகுகின்றேன். ஒரு கோவில் 3 முகம் கொண்ட சிவன் சிலை கொண்ட கோவில் ஒன்று இடிபாடுகளுக்கிடையேயும் வழிபாடு நடப்பதால் பத்திரப்படுத்தப்பட்டிருக்கும் கோவில் இது.
சிரித்தபடி விழித்துப் பார்க்கும் நேர்முகம், வாய்திறந்து கையில் இருப்பதை விரும்பிப் பார்க்கும் இடது முகம், கண்மூடி மௌன நிலையில் இருக்கும் வலது முகம் கழுத்தில் பாம்பு, கையில் உத்திராட்டம் என்று வித்தியாசமான சிவன் கோவில், அதன் பிரம்மாண்ட தோற்றம் குளிர்ச்சியான இடச்சூழலும் என்னை அழுத்தி உட்கார வைத்து விடுகின்றது. எதிரில் இருந்த பிரம்மாண்டமான முகம் சிரித்தும், பயமுறுத்தியும், சாந்தப்படுத்தியும் என்னுள் நுழைந்து கொள்கின்றது.
கோவிலை விட்டு வெளியேறி வந்த பின்பும் விழித்துப் பார்த்த சிவபெருமானின் கண்கள் என்னை உற்றுப் பார்க்கின்றது.
|
Post a Comment