சூரியாள்

Tuesday, November 26, 2013
குவாலியர் பயணம்
அடுத்த பயணத்திற்கு தயாராகின்றேன். மொரீனாவிலிருந்து சிஹோன்யா போக வேண்டும் என்று கிளம்புகின்றேன். நீண்ட நேர தேடலுக்குப் பின் கிராமங்களூடாக நெடுக பயணித்தபின், ஓட்டுநர் சரியான பாதையில் தான் போகிறாறே என்ற கேள்விகளுக்கும் அப்பால் “ககன்மட்” என்ற கோவிலுக்கு வந்து சேருகின்றேன். சிஹோன்யாவிற்கு முன்னாடியே வந்து விடுகின்றது. புராதான காலக் கோவில். மூடிக்கிடந்த கோட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைகின்றேன் மிகப்பெரிய உடும்பு  2 அடி நீளத்திற்கு என்னை கடந்து போகின்றது.        
ககன்மட்
      எந்த வித தகவல்களும் அந்த அந்த சிவன் கோவில் அடுக்கப்பட்ட கற்கலினால் எடுக்கப்பட்ட கோவில், கற்களின் கோவில். கச்சுவாகா அரசாட்சியின் எச்சம் 1015 -1035 காலக்கட்டத்திற்குரியது சிமெண்டோ, சுண்ணாம்போ இல்லாமல் கட்டப்பட்ட கோவில் ராணி சுகன்வதியின் நினைவாக ராஜா கீர்திராஜ் கஜீராஹோ பானியில் கட்டப்பட்ட கோவில் 175 அடி உயரமுடையது.
   யாருமற்ற அந்த கோவிலை சுற்றி நிறைய கோவிலின் உதிரிப் பாகங்கள் சிதறிக் கிடக்கின்றன. அவையெல்லாம் சேர்த்தால் இன்னுமொரு கோவிலே கட்டலாம் போல. நுழைந்தவுடன் இருந்த சிவன் கோவிலும் இடிந்த சுவரும் ஈர்க்கின்றது. அதையும் தாண்டி உள்ளே போக கோவிலுக்கு நேராக ஒரு அலங்கார வளைவு தெற்கு வடக்காக  பொருத்தமில்லாது இருக்கின்றது. கோவிலுக்குள் போக அடுக்கப்பட்டிருந்த கற்கள் தலையில் விழுமோ என்ற அச்சம் வருகின்றது.
   படிக்கடியில் ஒளிக்கப்பட்டிருக்கு அரைவட்ட வடிவகல். பெரிய தூண்கள், சில தூண்களின் பாதியைக் காணோம். சுற்றுச் சுவர்களில் வருண, வாயு, அக்னி, சூரிய, சந்திர பகவான்களின் சிலைகளும் பெண்களின் சிலை, யாழியில் அமர்ந்திருக்கும் குட்டிப்பெண் சிலைகளும் அழகாயிருக்கின்றன. கருவரை நுழைவாயிலுல் இருந்த யாழி கொஞ்சம் வித்தியாசமாய் செவ்வர்ணம் பூசி தொடையில் குறியேந்றி காணப்படுகின்றது.
       அதைத்தாண்டி சிகோன்யா என்ற கிராமத்தை அடைகின்றோம். எருமைகள் அவர்களின் செல்லங்களாய் வளம் கொழிக்கின்றன. பெரும்பாலான கிராமங்களில் மின்சாரம் இல்லை. மின்சார வயர்கள் அறுந்து வயல்வெளி தண்ணீரில் மிதக்கின்றன. வீடுகளின் வாசல்கள் எருமைச் சானியால் மொழுகப்பட்டு கட்டில்கள் வெளியே கிடக்கின்றன.
      ஜெயின் கோவிலுக்கு பிரசித்தியான சிகோன்யா கோவில் எங்கே என்று கேட்கவும் ஒருவர் கோவிலின் பொறுப்பாளர் என்று சொல்லி எனை ஏற்றிக் கொண்டு போங்கள் என்றார்.
  அவரோடு பயணமானோம். கோவில் வாசலில் இறங்கியவுடன் கூடவே அழைத்துக் கொண்டு போனார். மூடிக் கிடந்த கோவிலைத் திறந்து உள்ளே இருந்த மூன்று திகம்பர மூர்த்திகளின் சிலையைக் காண்பித்தார். அது சுயம்புவாக வந்தது என்று சொன்னார். கடவுள்கள் வேறு வேறானும் ஒரே கதைகள் தான். ஒரே மனிதர்கள்  தான். பாஷை வேறானாலும் முகமும் மொழியின் தொனியும் சொல்லியவற்றை புரிய வைத்து விட்டு விடுகின்றன.
          சாப்பாடு சாப்பிட்டு விட்டு போகச் சொல்லி வற்புறுத்துகின்றார். அறை அறையாக திறந்து காண்பிக்கின்றார். ஒரு அறையில் பல மகாவீரரின் சிலைகள் சம்மணமிட்டு  அமர்ந்த நிலையில். ஒவ்வொரு ஒவ்வொரு நிறக் கல்லில் ஒவ்வொன்றின் அடியிலும் ஏதாவது ஒரு குறியீடு பறவை, விலங்கு, செடி இப்படி பொறிக்கப்பட்டுள்ளது ஒன்று போல மற்றொன்று இல்லை.


 
posted by mathibama.blogspot.com @ 11/26/2013 10:21:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates