சூரியாள்

Friday, October 11, 2013
kavithai
சுவடுகள் மறுத்த பாதை

அரும்புவதும் பிரிவதும்
வாழ்க்கையாயிற்று
நேற்றும் பார்த்தேன்
இன்றும் பார்த்திருந்தேன்
நாளையும் பார்ப்பேன் என்றாலும்
வேறொன்றாகவே தொனிக்கும்
ஒவ்வொன்றும்  அடுத்தமுறை
தொலைபவையாகவே இருக்கின்றன

சுவாசத்தை இறுக்கியபடி
இருந்திருந்த பாறை
நீர் தழுவுகின்ற போதெல்லாம்
இறுகியே இருக்கின்றது
எல்லா காலத்தும்
தன்னில் சுவாசத்தை
முளைத்திருந்த புல் வழி காட்டிடும் பாறை
நான் கடந்து காணாமல்
போன பின்னும் இருக்கும்
என் சுவடுகளைப் பதித்துக்
கொள்ள மறுத்து விட்ட பாறைகளுக்கு
எதை விட்டுச்  செல்ல
என் நினைவாய்


posted by mathibama.blogspot.com @ 10/11/2013 08:17:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates