சுவடுகள் மறுத்த பாதை
அரும்புவதும் பிரிவதும் வாழ்க்கையாயிற்று நேற்றும் பார்த்தேன் இன்றும் பார்த்திருந்தேன் நாளையும் பார்ப்பேன் என்றாலும் வேறொன்றாகவே தொனிக்கும் ஒவ்வொன்றும் அடுத்தமுறை தொலைபவையாகவே இருக்கின்றன
சுவாசத்தை இறுக்கியபடி இருந்திருந்த பாறை நீர் தழுவுகின்ற போதெல்லாம் இறுகியே இருக்கின்றது எல்லா காலத்தும் தன்னில் சுவாசத்தை முளைத்திருந்த புல் வழி காட்டிடும் பாறை நான் கடந்து காணாமல் போன பின்னும் இருக்கும் என் சுவடுகளைப் பதித்துக் கொள்ள மறுத்து விட்ட பாறைகளுக்கு எதை விட்டுச் செல்ல என் நினைவாய்
|
Post a Comment