கோரைகளின் கதைகள்
நதியைப் பற்றி அறிமுகம் செய்யத் தொடங்கினான் வழிகாட்டி நீரின் வருகையையும், வீழ்தலும் இல்லாமல் போதலுமே அதன் கதையாயிற்று அவன் மொழிகளில்
வெள்ளமென வந்த போது அறுந்து பட்ட மரங்கள் தொலைந்து போன பாறைகள் பாறைகளின் பொந்தில் கட்டியிருந்த கூடுகளைத் தொலைத்த பறவைகளின் கதைகள் காணாமலே போயிருந்தன
காலத்தின் ஏற்ற இறக்கத்தை வயதை ஒப்புவித்த பாறைகளும் பள்ளங்களும் அவன் சொற்களில் தொலைந்திருந்தன
பார்வைக்கு எட்டாத கதைகள் நீரோட்டங்கள் தாண்டி ஒதுங்கிக் கிடக்கின்றன கரைகளில் கோரைகளாய் பெண்களின் வசவுகளோடு
|
Post a Comment