கற்பனை வாழ்வு
மூடிக் கிடந்த அறை வெளியில் விழித்திருந்த விழிகளுக்கிடையில் ஆடிக் கொண்டிருந்தன கற்பனைகள்
உள்ளே இருப்பது எது என்பது அவரவர் கற்பனையாயிற்று
ஒரே உறக்கம் பெண் என்கின்ற புனைவில் சோம்பேறித் தூக்கமாயிற்று ஆண் எனில் களைப்புக்கான ஓய்வுக்கானதாயிற்று
குழந்தை என்பதில் விளையாட்டாயிற்று ஆணும் ஆணும் என்பதான புனைவில் சண்டையும் குருதியுமாயிற்று பெண்ணும் பெண்ணும் எனில் உலர்ந்த உருப்படிகள் மடித்துக் கொண்டன ஆணும் பெண்ணும் என்பதில் கிசுகிசுக்களும் கலவி குறித்தான கற்பனைகளும் உலாவர
அறை வெற்றிடமாய் கிடந்தது ஓடிய விசிறிகள் புழுங்கிய தரையை விசிறிக் கொண்டிருந்தன தலைகீழாய் கற்பனைகள் மாறுமட்டும் நிஜங்களால் நிரம்ப மறுக்கின்றது
வாழ்வின் அறைகள் |
Post a Comment