சூரியாள்

Thursday, May 03, 2012
ஞானம் இதழில் வந்த பேட்டி

இலங்கை “ஞானம்”  இதழுக்காக அனுப்பட்ட பேட்டி, இதழில் வெளி வந்ததாக தகவல் வந்தது..உங்களின் பார்வைக்கும்

1,பெண்ணியம் பெண்ணிலை வாதம் இப்படியெல்லாம் சில சொற்கள் இன்று பேசப்படுகின்றன இவற்றிற்கான சரியான அர்த்தம் என்ன?
பெண் இதுவரை தன் குடும்பம் தன் சமூகம் தேவை சார்ந்து சிந்திக்கவும், அது சுமூகமாக இயங்க  தன்னை இழந்து வாழ ஒப்புக் கொடுப்பவளாகவும் உருவாக்கப் பட்டிருக்கின்றாள். அதை இதுவரை உணராத படிக்கும் வாழ பழகி விட்டிருந்தாள். ஆனால் இன்று  இதுவரை காலம் காலமாய் இருந்திருந்த வாழ்விலிருந்து அவளை நகட்டிப் போடுகின்றது இதுவரை அவள் யாருக்கெல்லாமோ  வாழ்ந்தாலோ அவர்கள் யாரும் அவளது  செயற்பாட்டில் உடன் வராமல் போகின்ற போது தன் பக்கத் தேவைகளை சொல்லிப் பழகுகின்றாள். நம் தேசத்தில் பெண்ணியம் அப்படித்தான் பழக்கத்தில் வந்தது. அது அவள் தேவை அவள் பார்வை அல்ல, சமூக தேவை  அதற்கான பாதை என்பதை உணர்த்துவதற்கான வழிமுறையாக  பெண்ணிலை வாதம் செயல்படுகின்றது தனி மனித உழைப்பு மட்டுமானது அல்ல அவளது உழைப்பும் சமூக அர்ப்பணிப்பே. .உணர்வுச் சிதைவுகளைத் பெண்களுக்கு தந்து போகின்ற சமூகம் அதை அவள் உணர முடியாமல் செய்திருப்பதை உணர்வதும் உணர்த்துவதும் அதிலிருந்து மீள்வதுமாக பெண்ணிய சிந்தனையும் செயல்பாடும் இருக்க வேண்டும்.
2நீங்கள் ஒருபெண்ணிய செயற்பாட்டாளராக அடையாளப் படுத்தப் படுகிறீர்கள் என்றால் அதற்கான விசேடம் அல்லது வேறுபாடு என்ன?
பொதுவாக பெண்ணிய  செயல்பாட்டாளார்கள் மேலைத் தேய பெண்ணியத்தை புத்தகங்களில் படித்து அதை வழியொற்றி செயல்படுகின்றனர் .ஆனால் என்னைப்  பொறுத்தவரை என் வாழ்வின் கேள்விகளிலிருந்து பெண்ணுக்கான  மனித இருப்பு முன்னிலைப் படுத்தப் படுகின்றது. அது வாழ்வுக்கும் எழுத்துக்குமான இடைவெளியை குறைக்கவும், மேலைத் தேய பெண்ணிய செயற்பாட்டாளர்களின் சமூக விலகலை தவிர்க்கவும் பயன்படுவதுதான் விசேடம் என நினைக்கின்றேன்
3,நீங்கள் ஒரு பெண்ணிய செயல்பாட்டாளராக அடையாளப் படுத்த தேவையில்லை என்று கூறுகின்றீர்கள்.உங்களது படைப்புகள் பெண்ணியவாதியாக அடையாளம் காட்டுகின்றன. அதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?
உண்மையில் எழுத்துவே எனது பெண்ணிய செயல்பாடாகவும் இருக்கின்றது. ஆனால் எழுதும் போது பெண்ணிய எழுத்துக்களை அல்லது பெண்களுக்கான எழுத்துக்களை எழுதப் போகின்றோம் என்று ஒரு நாளும் தீர்மானித்துக் கொண்டு எழுதுவதில்லை என்பதால் பெண்ணியம் எனது வரையறை இல்லை. எல்லைகளற்ற மனித நேயமே எனது விருப்பம் என அழுத்திச் சொல்ல வேண்டியிருகின்றது. 
பெண்களுக்கானது மட்டுமானது எனது எழுத்து என்ற வரையறையை ஒரு படைப்பாளியாய் நிராகரிக்கின்றேன் ஒரு விமரிசகனாய்  அது பெண்ணின் இன்றைய மனித இருப்பை கோருகின்றன  எனச் சொல்லவும் தயாராக இருக்கின்றேன்
4,தற்கால இலக்கிய படைப்புகளில் பெண்ணைப் பற்றிய  எழுத்துக்கள்   எவ்விதம் வெளிப்படுகின்றன?அவ்விதமான எழுத்துக்களில் இருந்து உங்கள் எழுத்துக்கள் எவ்விதம் வேறுபடுகின்றன.உங்கள் எழுத்துக்களுக்கு சக பெண் படைப்புகளில் இருந்து  எவ்விதமான எதிர்வினைகள் வருகின்றன. நீங்கள் அவற்றை எவ்விதமாக எதிர்கொள்கின்ற்றிகள்
இன்றும் மிக முக்கியமான எழுத்துக்களாகவும் , முக்கிய படைப்பாளியாகவும் இருக்கின்றவர்களிடம் கூட  பெண் பற்றிய பார்வை மிக மோசமாகவே இருக்கின்றது. உதாரணமாக ஜெயமோஹன் கொற்றவையில் பெண் பாத்திர வார்ப்புகள் அவள் ஆணுக்கானவளாகவும் , அல்லது ஆணின் வக்கிரத் தனங்களுக்கு வடிகாலாக இருக்க வேண்டியவளாகவும்  அந்த எழுத்துக்களும் சொல்முறைமைகளூம் அல்லது அவளின் இயலாமையை முன்னிருத்தும் விதமாக இப்படியே இருந்து விடுகின்றது. அதே நேரம்  இச்சமூகம் வைத்திருக்கின்ற பெண் பற்றிய புரிதலிலிருந்து விலகி, மிக இயல்பாக உறுத்தலில்லாது பெண் பற்றிய சரியான சிந்தனைகளை பார்வைகளை வைத்துப் போகின்ற கூகை,  போன்ற படைப்புகளும் ரொம்ப அரிதாகவே கிடைக்கின்றன.சமீபமாக பெண் எழுதுகின்ற எழுத்துக்களிலும் அவள் உடலை மட்டுமே சிந்திக்க வைத்த பெரும் பணியை வணிக நோக்கிலான சிறு பத்திரிக்கைகளும் வளர்த்து விட்டு வருக்கின்றன. அதிலிருந்து விலகி சிந்திக்கும் பெண்கள் அதிக வெளிச்சமில்லாது ஆனால்  வலுவாக தங்களின் எழுத்துப் பணியை ஆற்றி வருகின்றனர். கீதாஞ்சலி பிரியதர்சினி, அனார்,  வைகைச் செல்வி தமிழச்சி தங்கப் பாண்டியன் ஆகியோர்களை அந்த வரிசையில் சொல்லல்லாம்
 
5, இன்றைய சூழலில் பெண் படைப்பாளிகள் முதன்மை படுத்தி எழுத வேண்டிய விசயம் என்னவாக இருக்க வேண்டியிருப்பதாக நம்புகின்றன?
தங்களது வாழ்க்கையை மட்டும் என்றில்லாது தாங்கள் வாழ்க்கையில் கண்ட தரிசனங்களை எந்த வித தயக்கமுமில்லாது எழுத முன்வரவேண்டும் அது ஏற்கனவே இருக்கின்ற வரையறைகளுக்குள் இருக்கிறதா என்று தேடித் திரிய வேண்டியதில்லை. பெண்களின் உணர்வுச் சிதைவுகள் மறக்கப் பட்டும மறைக்கப் பட்டும் வருகின்ற இந்தச் சூழலில் அதுவே  இன்றைக்கு பெண் கவிஞர்கள் கவனகப் படுத்த வேண்டிய முக்கிய விசயம் என்று நினைக்கின்றேன்
6தமிழில் உங்களுக்கு பிடித்த படைப்பாளிகள் யார்?
 லா .சா ரா,பொன்னீலன் சோ. தர்மர், திருமாவளவன், அனார், லறீனா ஹக், தமிழ் செல்வி, வைகை செல்வி, கீதாஞ்சலி,  பிரியதர்ஷிணி, தமிழச்சி தங்கப் பாண்டியன்,பா. வெங்கடேசன், அமிர்தம் சூர்யா ரிஷாண் ஷெரீஃப்
 உண்மையில் இப்படைப்பாளிகளின் சில படைப்புகள் எனக்கு மிகப் பிடிக்கும். பிடிக்காமல் போன படைப்புகளும் உண்டு எனவே பிடித்தது என்பது படைப்பை அடிப்படையாகக் கொண்டதே அல்லாது படைப்பாளியை அல்ல  
posted by mathibama.blogspot.com @ 5/03/2012 07:17:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates