சிவாகாசி என்றவுடன் நமக்கு தீப்பெட்டியும், பட்டாசும்தான் நினைவிற்கு வரும்!
ஆயினும் அங்கு அதற்கும் மேலான பல விஷயங்கள் உள்ளன. குறிப்பாகக் கல்வி!
அங்குள்ள இரண்டு கல்லூரிகள் பேசும் அழைப்பு வந்தது. அய்ய நாடார், ஜானகி
அம்மாள் கல்லூரியில் தமிழ்த்துறை மாணவர்களுக்கு சூழலியல் குறித்த ஒரு ‘தாள்’
உண்டென்று பேரா.சிவநேசன் சொல்லி என்னைச் சுழலியல் சிந்தனைகள் என்று
பேசச்சொன்னார்.
துறைத்தலைவர் பேரா.சிவநேசன் முன்னுரை எனக்கு ஆச்சர்யம் கலந்த மிகிழ்ச்சி. தமிழ் மாணவர்கள் ஏன் சூழலியல் படிக்க
வேண்டும் என்ற கேள்வி? எனவே ஐந்திணை நிலப்பாகுபாட்டை விளக்கி அது எப்படி சமகால
சூழலியல் பரிபாஷையான Biotypes என்பதுடன் ஒத்துப் போகிறது என்று சொன்னேன்.
கவிஞர் திலகபாமா அவர்களின் அறிமுகயுரை பிறகு எனது சுபமங்களா சிறுகதையான ‘பாலைத் தெய்வம்’ என்பதைச் சொல்லி எப்படி
குறிஞ்சியும், முல்லையும், மருதமும் திரிந்து பாலை ஆகிறது என்று விளக்கினேன்.
சமகால கொற்றவை வழிபாட்டின் உளவியல் பின்னணியை விளக்கினேன்.
என் பேச்சைக் கேட்கும் மாணவர்களின் பெண்கள் தொகுதி தமிழின் அழகியல் சிந்தனைகளுடன் ஒத்துப் போகாத ஒரு அழுக்குப் பிடித்த வாழ்வை
ஏன்? எப்போது? தமிழன் வாழத்தலைப்பிட்டான்? என்ற கேள்வியை மாணவர் மனதில்
விதைத்தேன். சுத்தம் சோறு போடும் எனும் பழமொழிக்கு இன்னும் தமிழகத்தில் பொருள்
உள்ளதா? என்றேன். ‘நீரின்றி அமையாது உலகு’ எனும் வள்ளுவப் பேராசானின்
சூத்திரத்தை அறிவியல் வழியில் விளக்கினேன். ஆண்டாள் பேசும், ‘ஆழி மழைக்
கண்ணா!’ எனும் பாசுரத்தில் மறைந்துள்ள நீர் சுழற்சி பற்றிச் சொன்னேன். பின் நீண்ட கேள்வி பதில் பகுதியை உருவாக்கினேன். முதலில் தயங்கினாலும் பின்
பேசத்தொடங்கினர். பார்வையற்ற ஒரு மாணவி கேள்விகளைத் துவங்கினார். ஆண்களில்
பார்வையற்ற ஒருவரும் நிறையக் கேள்விகள் கேட்டார். காணாத உலகு குறித்த
அவர்களின் அக்கறை நெகிழ வைத்தது! பொதுவாக எல்லோர் கேட்ட கேள்வியும் பொருள்
உள்ளவையாக இருந்தன. இரண்டு கேள்விகள், மாதிரிக்கு? 1. சைவமா? அசைவமா? எது சூழல் பார்வையில் உகந்தது!!
2. வெளிநாட்டுத்தமிழரான தாங்கள் ஆங்கிலம் கலக்காத தூய தமிழ்ப் பேசும் போது
இங்கு ஏன் எங்களால் அது முடியவில்லை? மதியச் சாப்பாடுவரை கேள்விகள் நீண்டன.... இன்னும் வரும்.. நா.கண்ணன் |
Post a Comment