நான் நதி போகின்ற பாதை திலகபாமா போன நிமிடம் வரை என்னோடிருந்த நீர் கடந்து போயிருந்தது அடுத்த வந்த நீரும் கடந்த நீர் குதித்தோடிய அதே பாவனையில் நான் ஒரே நீரென்று மாறாத தோற்றத்தில் உதிர்ந்த சருகொண்று இன்று மரம் உதிர்த்து விட்டதற்காக வருந்தாது என்னுள் மூழ்கிய போது கடந்து கொண்டே இருப்பதை காட்டிக் கொடுக்கிரது என்றும் புதியவள் என்றுணர்த்த Labels: கவிதை |
Post a Comment