தோல்விகளின் நிழலில் வெற்றிகள் திலகபாமா அந்த ஆடுகளத்தில் நாய் வாலை நிமிர்த்துபவர்களுக்,கு வெற்றி என அறிவிக்கப் பட்டது நிமிர்த்துவதற்கான நேரம் கழிந்து கொண்டிருக்க நாய்களின் வாலில் முடிகள் உதிரத் தொடங்கியிருந்தன நாய்களின் வால் நிமிர்த்தத் தேவையின்மையையும் நிமிர்த்தாமலிருப்பதன் நன்மையையும் நிமிர்த்தினால் வரும் தீமையையும் நான் உரையாற்றி முடித்திருந்த போது சூரியன் முதல் ஆடுகளம் வரை முழுக்க காலியாகியிருந்தது வெற்றி என்பதை உதிர விட்டு மயிர்கள் உதிரா வால் கொண்ட நாயோடு கிழக்கு நோக்கி நடக்கின்றேன் தோல்வி என்று அவர்கள் கை நீட்டுவதின் நிழல் படாத தொலைவிற்கு |
Post a Comment