சூரியாள்

Monday, November 14, 2011
காரைக்கால் அம்மையார்களும், கல்பனா சாவ்லாக்களும் 1
காரைக்கால் அம்மையார்களும் , கல்பனா சாவ்லாக்களும்
நன்றி பாவையர் மலர்
இது கா னாவிற்கு, க வன்னா போட்டு எழுதும் எதுகை சாதுர்யம் அல்ல.
திலகபாமா
பெண்ணியமும் பெண் குறித்த உரையாடல்களும் பேசிப் பேசித் தீர்த்துக் கொண்டிருக்கின்ற இன்னேரத்தில் நான் சந்தித்த நாடு கடந்த பெண்களுக்கிடையேயும் நம்மூர் கமலாவும் கருப்பாயியையும் துருக்கி இளவரசியின் கதைகளில் காண நேர்ந்த அனுபவத்தை பேசுகின்ற தொடரிது
உற்று வாசியுங்கள் இதற்குள் நீங்களும் நான் வைத்த பெண்ணின் பெயரில் உலாவரலாம் , சம்பவங்களில் பெண் இருப்பு தொலைவதை காட்சிகளாக்கி பேசுகின்ற தொடரிது.
வாசிப்பில் மறைக்கின்ற வெளிச்சங்கள்
லட்சுமிஅம்மாள் ஒரு பெண் போராளி என்று நான் சொன்னால் யார் நம்பக் கூடும். ஆயுதம் ஏந்தினாரா? கோரிக்கைகளுக்காக போராட்டங்கள் நடத்தினாரா? அவரின் போராட்டங்கள் எதில் பதிவாகியிருக்கின்றது என்கின்ற கேள்வி உங்களது முன்னால் எழும்பக் கூடும்.
இது எங்கள் பொது புத்தியிலிருந்து எழும்பி வருகின்ற கேள்வி
ஆண் தீர்மானித்த வரையரைகளுக்குள் சிக்காமல்தான் எப்பவும் பெண்ணின் வெளி இயக்கிக் கொண்டிருக்கின்றது. அதனாலேயே அவள் சாதாரணமானவளாக எவ்வளவு பிரம்மாண்டங்களோடு இருந்தாலும் பார்க்கப் பட்டு விடுகின்றாள் அதற்கான சின்ன வலுவான உதாரணம் லட்சுமி அம்மாள்
யார் அந்த லட்சுமி அம்மாள் ?
பலருக்கு அவர் சி. கனசபாபதியின் மனைவி
இடது சாரி சிந்தனையாளர்களுக்கு அவர் ஒரு முற்போக்கு வாதி
அவ்வளவுதான். இன்று எத்தைனையோ இலக்கியவாதிகளின் மனதில் இருந்தாலும் வெடித்து முடிந்த அமைதியான எரிமலையின் சாட்சியங்களற்ற தடம் மட்டுமே
ஆனால் அம்மாவின் விஸ்வரூபம் குறுக்கப் பட்ட இடம் ஒன்றுண்டு எனறாள் அது சமூகப் பார்வையில் குடும்பப் பெண்ணுக்கான இடம்
ஏன்?
ஒரு சம்பவம், அதற்கு முன்னால் அம்மாவைப் பற்றி சில வரிகள்
புதுக் கவிதை விமரிசகராண சி . கனசபாபதியின் மனைவியாவதற்கு முன்பிருந்தே இடது சாரிக் கொள்கைகளில் தீவிரப் பற்றுடையவராய் இருந்த இவர் ராஜபாளையத்துக் காரர்.படிப்பாளி, சீன இலக்கியங்களை மொழி பெயர்க்கும் ஆற்றலுடையவர். இடது சாரிச் சிந்தனையாளேயே ஜீவாவுடன் கூட நெருங்கிய தொடர்பிலிருந்தவர்.இலக்கிய அழகியலையும் ரசிக்கக் கூடியவராக இருந்ததால், பாரதி தாசன் தொடங்கி புதுமைப் பித்தன், செல்லப் பா, லா சாரா என பல்வேறு படைப்பாளிகளோடும் நேரடித் தொடர்பிலிருந்த ஆளுமையான பெண். சி கனகசபாபதியை கரம் பிடித்தது கூட ஒரு மிகப் பெரிய புரட்சிதான். இரண்டாம் தாரமாக தனது அக்காள் கணவருக்கே வாழ்க்கைப் பட குடும்பம் நிர்பந்தித்த போது துணிந்து நின்று அதை எதிர்த்து மார்க்ஸிய பார்வையாளர் என்ற ஒரே காரணத்துக்காகவே சி. க வின் கரம் பிடித்தவர். கரம் பிடித்தவர் வாழ்வில் சிறப்பாக வரவேண்டும், அது தன் வெற்றியாகப் பார்க்கப் படும் என்று உணர்வு வந்தபோது அவரை முன்னிறுத்தி தான் பின்னாடி நின்று சமையல் கட்டோடு கரைந்து போகாமல் அவரோடு இணையாக நடந்ததே பெரிய புரட்சியும் போராளித் தனமும்தான். ஆனால் நாமெல்லாம் அதை போராளித் தனமாக வாசிக்க மாட்டோமே. யாரோ சிலரின் உணர்வு பேச்சுக்களுக்கு இரையாகி அவர்களஹ்டு வெற்றிக்கான படிக்கட்டாக தன்னை தன் உயிரை பலியாக்குவதை மட்டுமே போராளித் தனங்களாக பார்த்துக் கொண்டிருக்கின்ற நமக்கு குடும்ப அமைப்பில் உறுத்தாமல் வ் என்று வந்த லட்சுமி அம்மாள் போராளியாக தெரியாமல் போவது பொதுப்புத்தி வாசிப்பு அல்லாது வேறென்ன
அவரோடு இருந்த நாற்பது ஆண்டு கால இலக்கிய வாதிகளைப் பற்றி பதிவு செய்ய முயன்ற போது தான் அவரது ஆளுமை புரிந்தது 60 களில் ஒரு ராஜபாளையத்தைச் சேர்ந்த பெண் இயக்க ஆளுமையான ஜீவாவோடும், இலக்கிய ஆர்வலரான லா.சாரா வோடும் நெருங்கிய தொடர்பிலும், ரஷ்ய மொழி இலக்கியங்களை மொழிபெயர்த்துதரச் சொல்லிக் கேட்கும் திறமையோடும், முதல் விமரிசனம் என் கதைகளுக்கு நீதான் என்று சொல்லும் படியான வாசிப்பனுபவமோடும் இருந்திருந்தார் என்று அறிய வந்த போது ஆச்சரியமாக இருந்தது ஆனால் எந்த இடத்திலும் தன்னை ஈர்த்த பெண்ணை பற்றி உச்சரித்து விடாது அத்தலைவர்களும் இருந்திருக்கிறார்கள் என்று யோசித்த போது, இன்னுமொரு சம்பவமும் நினை வுக்கு வருவதை சொல்லாமல் இருக்க முடியவில்லை ஒரு முறை என்னோடு மதுரையிலிருந்து சென்னை வரை இரயிலில் பயணம் செய்த நண்பர் சென்னை வந்திறங்கியதும் நான் என் வழக்கமான தங்குமிடத்திற்கும் அவர் தனதான தங்குமிடத்திற்கும் சென்று விட்டோம். இருவர் வேலைகளும் தனித் தனியானவை . முடித்து விட்டு புத்தக கண்காட்சிக்கு நான் சென்றபோது, தன் நண்பர்கள் குழாமோடு இருந்த அந்த நபர்
ஓ திலகபாமா வா எப்போ வந்தீங்க என்று கேட்டாரே பார்க்கலாம்
நான் சிரிப்பை அடக்க முடியாது அந்த இடத்தை விட்டு நகன்று விட்டேன்.
அதே நிகழ்வை இருபது வருடம் கழித்து இளமையெல்லாம் தொலைந்து தள்ளாமையில் இருவரும் சந்தித்து கொண்டபோது அதன் சாட்சியமாய் நானிருந்தேன். அம்ம அவரது எழுத்தாளுமைகளை பற்ரி சொல்ல சொல்ல, அவரோ ஒரு வார்த்தை கூட அம்மாவின் வாசிப்பு விமரிசனம் பற்றி யெல்லாம் கூட பேசாது நீ நல்ல சமைப்பையேடியம்மா என்றேரே பார்க்கலாம்
எனக்கு அன்று சிரிப்பு வரவில்லை, கோபம் வந்தது.அவரின் தள்ளாமையில் கோபத்தை காண்பிக்க முடியாத புரிதலோடு மௌனமாக வெளி வந்து விட்டேன்.
இவர்களோடு என்ன புரிதலோடு நட்பு வைத்துக் கொள்ள முடியும் என்று சலிப்பாக வந்தது. அன்று இருந்திருந்த லட்சுமி அம்மாளின் விஸ்வரூபத்தை எவ்வளவு சின்னதாக்கி வாசித்து விட்டு விடுகின்றீர்கள் என்று தெரியவந்தபோது,
பெண்ணின் வெற்றியை வாசிப்பில் மறைக்கின்ற வெற்றிகளாகவும் , மறைக்கப் பட்டு விடுகின்றபோது அது தொல்விகளாக கரைந்து போய் விடுவதையும் உணரமுடிகின்றது.
சரி குடும்பத்திற்குள் இருந்தவளைத்தான் நாங்கள் ஒத்துக் கொள்வதில்லை அவளது வாழ்வு எவ்வளவு போராட்டத்துடன் வாழப் பட்டதாயினும் அது போராட்டமென்றோ அல்லது அவள் போராளி என்றோ இச்சமூகம் வடிவமைத்த மனிதர்களாய் வாழும் நாம் யாரும் ஒத்துக் கொள்வதாயில்லை. அது தனி மனிதத்துவம் சார்ந்த வாழ்வியலாகவே பார்க்கப் பட்டு விடுகின்றது

Labels:

posted by mathibama.blogspot.com @ 11/14/2011 09:28:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates