அசமம் கழுகுத் தன் வானப் பார்வையிலிருந்து கேள்வி எழுப்பியது. தட்டையான சமவெளியில் நேராக போகத் தெரியாத நதி பற்றிய எள்ளலை நெளிந்து நெளிந்து போயிருந்த நதிக்குத் தெரிந்திருந்தது கழுகுப் பார்வையில் காணக் கிடைக்காத மேடு பள்ளங்கள் தழுவலில் மட்டுமே புரியக் கூடிய அசமங்கள் தானென Labels: கவிதை |
அருமை