தரு மிஞான் உயிரற்ற உங்கள் உடல்களின் வாசனையை உறிஞ்சுகின்ற தருவாய் நான் காலாவதியாகிப் போன உடல்கள் உயிர்க்க திராணியற்று மக்குகின்றன என் சுவாசத்தில் மீந்தும் எலும்புகளை உன் அதிகப் படியான விலாவுக்கு சாட்சியாய் விட்டு வைக்கின்றேன் பாம்புகள் சொல்லி பழங்களை ஏவாள்களுக்குத் தரும் ஆதாம்கள் பைசாகியின் அருள் ஏந்தி கண்களில் வழியும் காதல் ரசமருந்து வியர்வைகளற்ற ஆமையும் தாகமோடிருக்கும் மீன்களும் கோடுகள் நெளியும் நீரும் நிறைந்த ஏரி கடக்க ஓர் இரவின் இறப்பு போதாது விடியலின் பிறப்பை நமக்குணர்த்த Labels: கவிதை |
Post a Comment