கையேந்திய காதல் இதுவல்ல திலகபாமா பாறைகளிலிருந்து கசிந்து ஓடுகின்றேன் சொட்டுச் சொட்டாய் கை கழுவ என்றும் ருசி அறிந்திட என்ரும் தாகம் தீர்த்திட என்றும் கையேந்துகின்றாய் உயரத்திலிருந்து சேகரமாகி வீழுகின்ற துளி கூப்பிய உன் உள்ளங்கைக்குள் வீழ்ந்த போது தெறித்து சிதறி தரை, உன் முகம், உள்ளங்கை குழி எல்லாம் நனைத்தும் சேகரமாக மறுத்து தீர்ந்து போகின்றது அடிக்கடி நான் உன்னில் வீழ்த்துகின்ற என் காதல் போலவே எத்தனை சொட்டுக்களாய் வீழ்ந்த போதும் எதுவுமற்றே இருக்கின்றது உன் குவிந்த கைகள் |
கவிதை சிறப்பாக இருக்கிறது எளிமையான சொற்கள்
ஆனால் கூர்மையாக இறங்குகின்றன பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள் கவிஞர் திலகபாமா
--------------------------------------------
நந்தினி மருதம்
நியூயார்க்
2012- சூன் 25