நம் சமூக
மக்களுக்கு
“தேசிய இனமாதலுக்கு
அழைப்பு”
நாடார் மகாசன சங்கத்தின் சார்பாக மத்திய பிரதேசத்தில்
காசிக்கு அருகில் இருக்கும் சத்னா ஊரில் நடக்க இருக்கும் பாரதீய கல்சூரி ஜெய்ஸ்வால் சம்வர்கிய மகாசபா வின் கூட்டத்தில்
பெண்கள் பிரதி நிதியாக கலந்து கொள்ள முடியுமா என்று கேட்ட போது, மகிழ்வோடு சம்மதித்தேன்
காரணம் சாதியால் இன்று சமூகங்கள் பிளவு பட்டுக்
கொண்டிருக்கின்ற நடைமுறையிலிருந்து வேறுபட்டு இனத்தின் அடையாளத்தால் இன்று 30 இனங்கள்
அதன் தலைவர்களால், பிரதி நிதிகளால் ஒன்று படுவதும் அதை நோக்கி செயல்படுவது எந்த வைகையில்
சாத்தியம் என்று யோசித்த போதுதான் கலந்துகொள்ளும் ஆர்வம் கூடிப் போனது.அந்த கூட்டம்
தந்த அனுபவம் மிக முக்கியமானது நாடார்களின் இதுவரையிலான அரசியல் மற்றும் அதிகாரம் பெறுவதற்கான
கனவு நனவாகக் கூடிய திறவுகோல்கள் தெரிந்தன
அதை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.
பனை
மரம் மற்றும் தென்னை மரங்களோடு தொடர்புடைய இனமக்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் வசித்து
வருகின்றார்கள் அவர்கள் அனைவரும் இரத்த வழியால் ஒரே உறவுகள்.அதே வழியில் நாமளும் இந்த
இணைகின்றோம். மத்திய பிரதேசத்தில் இருக்கின்ற விக்கிரமாதித்தனுக்கும், தமிழக நாடார்
இனத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக சொல்லப் படுகின்றது. அவை உண்மையாகின்ற பட்சத்தில்
நம்முடைய இரத்த உறவுகள் இந்தியா முழுவதிலும்
வியாபித்து இருந்திருக்கத்தான் வேண்டும் அந்த வழியில் இதோ அலுவாலியா , ஜெய்ஸ்வால்,
க்லார், பில்லவா சௌகீஸ் ,தட்சேனா,ஈழவா, கௌட்,ஷத்திரியாஸ், ஈடிகா, ஈடிகாரா, கௌசோர்,மால்வியா,
மகாவீர், மேவார் நாடார் என இந்த எல்லா இனங்களும் , இனத்தை சார்ந்த எல்லா முக்கிய
பிரதிநிதிகளும் எம்.எல் ஏ, எம்.பி, ஐ ஏ ஸ், ஐ.பி ஸ் அதிகாரிகள் என அனைவரும் வந்திருந்தனர்.
இந்த பாரதீய கல்சூரி
ஜெய்ஸ்வால் மகாவீர் சபாவில் இணைவதன் மூலம் நமக்கும் நாளைய நம் தலைமுறையினருக்கும் கிடைக்க
போகின்ற நன்மைகளாவன
·
இந்திய தேசிய இனத்தில் நாடார் இனமும் ஒன்றாக இச்சங்கத்தில்
இணைவதன் மூலம் ஆகின்றது
·
மாநிலத்தில் மட்டும் இருக்கின்ற நாடார் இடத்தின் பெரும்பான்மை இனி தேசிய இனங்களின் பெரும்பான்மையோடு
இணைகின்ற போது அது மத்திய அரசியல் அதிகாரங்கலை,
இட ஒதுக்க்கீடுகளை பெறுவதில் முன்னகரும்
·
நமது இனத்திற்கான தொழிற்சாலைகள், புதிய கல்லூரிகள் இப்படியாக
முன்னேற்றத்தின் அடுத்த படிக்கட்டுகளை நோக்கி நகர இந்த ஒருங்கிணைப்பு நமக்கு உதவும்
ஒருங்கிணைந்த இந்த பெரும் தேசிய இனத்தில் பல்துறை அதிகாரிகளும் பிரமுகர்களும் நமக்கு
உதவி செய்யும் வாய்ப்பு கிட்டும்.
அதற்கான ஆதாரமாக
நம் இனத் தலைவர்கள் நமது சார்பில் இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.அவர்களின்
மதிப்பு அதிகரிக்கவும் நமது கோரிக்கைகளின் குரல் வலுப்பெறவும், இந்த ஒருங்கிணைப்பில்
நமது கரங்களின் வலிமை புலப்படவேண்டும் அதற்கு நமது இனத்தவர்கள் யாவரும் இந்த பா.க.ஜெ.ச.மகாசபாவில்
ரூபாய் 2500 கட்டி அங்கத்தினர்களாக வேண்டும். கூடுதல் அங்கத்தினர்களோடு நமது தலைவர்கள்
பங்கு கொள்ளும் போது நமக்கான வெளி உருவாகும்
எனவே உடனடியாக நாடார்
மஹாசனத்திலிருந்து அதற்கான விண்ணப்பங்களை பெற்று
தேசிய இனமாக நம்மை இணைத்துக் கொள்ள வேண்டுமாய்
கேட்டுக் கொள்கின்றோம்.
இனபற்றுக்கும் இன
துவேசத்திற்க்குமான இடைவெளியை ஒரு போதும் கடக்காத நம் சமூகத்தைப் போல இவ்வுலகிற்கு
உதாரணமாக எந்த ஒரு இனமும் இவ்வளவு வீரமோடும், விவேகமோடும் தம் இனத்தை வளர்த்துக்கொண்டதில்லை
நாமும் அடுத்த தலைமுறையினருக்கான விதைகளை நட்டு வைப்போம்.சந்
தாதாரராகுங்கள், ஒவ்வொரு
இன வளர்ச்சியும் நாட்டு வளர்ச்சியாய் மனித
நேய வளர்ச்சியாய் மாறட்டும்
பின் குறிப்பு
வரும் ஆகஸ்டு திங்கள் 9, 10 தேதிகளில் கன்யாகுமரியில் வைத்து இந்த அமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெறுகின்றது. விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்
9443124688
Post a Comment