ஒவ்வொரு முறையும்
கவிதைகளை
கை நழுவ விடவே பார்க்கின்றேன்
தாயிடம் அண்டும் குழந்தையாய்
விரல் பற்றி முழங்காலுக்குள்
ஒளிந்து கொள்ளும்
அதனை
வேறு வழியின்றி
தூக்கிஅணைத்தபடியே நகலுகின்றேன்
காலக்கடன்களாய்
தினந்தோறும்துன்பம்
கரைய
நீர் என்னைக் கழுவிச் செல்கிறது
காதலும் நண்பனுமாய் தாயுமாய் எனை எப்போதும்
கழுத்தோடு கட்டிக் கொள்ளும்
நீரோடு மட்டுமே
ஒப்புக் கொடுக்கின்றேன்
எனது காதலாலேயே
முக்கால்பங்கில் உலகம்
நிறைந்திருக்க
தீராது தொடருது
துன்பங்களின் பின்னாலில் இன்பங்கள்
|
கவிதை அருமை. வாழ்த்துகள்.