குவாலியர் கோட்டை
அங்கிருந்து கிளம்பி குவாலியர் கோட்டையைப் பார்க்கப் போகின்றோம்.
மான்சிங் அரண்மனை இது. தோமர் அரசர் மான்சிங் தோமர் என்பவரால் 1508ல் கட்டப்பட்டது.
மொத்தம் நான்கு அடுக்குகளைக் கொண்ட இந்த அரண்மனை 2 பாதாள அடுக்குகளைக் கொண்டது.
ஜீலாகா கேசர்
குண்டா, பான்சிகர் இவையெல்லாம் அங்கிருக்கும் அறைகள் பெயர்கள், தரையிலிருந்து 300 அடி
உயரத்திற்கு சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. மொகலாயர்கள் இதை கைப்பற்றிய பிறகு
இது சிறைக்கூடமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பலவித வர்ணங்களில் மின்னும் டைல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது
என்பது ஆங்காங்கே மின்னிக் கொண்டிருப்பதை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது.
|
Post a Comment