மாதவராவ் சிந்தியா அரண்மனையில் அமைந்திருக்கும் அருங்காட்சியத்திற்கும்
போகின்றோம். மாதவராவ் சிந்தியா குடும்ப அருங்காட்சியம் அது அவர்கள் பயன்படுத்திய பொருட்கள்
புகைப்படங்கள், அவரது லோக்சபா உரைகள், அவர்களது மிகப்பெரிய உணவுக் கூடத்தில், மேசையில்
ரயில்வே ட்ராக் ஒன்று வைக்கப்பட்டு scindiaஎன்ற பேரைச் சுமந்த ரயில் இயக்கப்பட்டது
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆடம்பரமான வாழ்க்கையின் ஆவணம் அது. வெள்ளை நிறமாளிகை இதில் ஒரு வேலைப்பாடுகள்
கொண்ட ஒரு மேசையைப் பார்க்க அதில் முருகன் சிலை தெரிகிறதே எப்படி என்று யோசித்துக்
கொண்டிருக்கையில் இது மகாபலிபுரத்திலிருந்து வரவழைக்கப்பட்டது என்றார் வழிகாட்டி
. மாதவராவ் சிந்தியாவின்
தனிப்பட்ட வீடு இன்றும் அலங்காரமாய். அது சரி ராஜ பரம்பரை அல்லவா.
சௌந்தர பாண்டியனாருக்கும்
இப்படி ஒரு சிறிய அளவிலாவது மியூசியம் வைத்தால் என்ன?
|
Post a Comment