தான்சேன்
சமாதி
தமிழ்நாட்டில் திருவையாறு போல
தான்சேன் சமாதியில் டிசம்பர் களை கட்டும் இந்துவாக இருந்து முஸ்ஸீமாக மாறிய பெரும்
இசைக் கலைஞன்.
இன்றும்
பலர் அமைதி தேடி இங்கு எல்லா இடமெங்கினும் அமர்ந்திருக்கின்றார்கள். முதியவர்கள், மாணவர்கள் புத்தகங்களோடு இங்கு ஓரமாய் ஆங்காங்கே அமர்ந்து
படித்துக் கொண்டிருக்கின்றனர். அமைதியை வழங்கி ஆற்றலைப் பெருக்கும் இடமாகவே அந்த இடத்தை
உணர்ந்தேன். தான்சேனின் குருவின் முகம்மது
காஸ் சமாதி உள்ளே இருக்கின்றது அதற்கு தலையில் முக்காடோடு போய் அஞ்சலி செலுத்தி விட்டு
அருகிலேயே அவரது குடும்பத்தார்களின் சமாதியும் இருப்பதை பார்த்துவிட்டு வருகின்றோம்.
கண்ணுக்கெட்டிய
தூரம் வரைக்கும் சமாதிகள் தான், தான்சேனின் சீடர்கள் சமாதி, தான்சேனின் சமாதி தனியே
இருக்கின்றது. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
தான்சேன் 9 ரத்தினங்கள் அலங்கரித்த அக்பரின் அரசவையில் ஒரு ரத்தினம். அங்கே
ஒரு புளியமரம் சமாதியினருகே இருக்கின்றது. நல்ல குரல் வளம் வேண்டுமென நினைப்போர் அதை
பிரசாதமாக சுவைத்துச் செல்கின்றனர்.
அந்த அமைதியை அனுபவிக்க நாங்கள் கொஞ்சநேரம் அமர்ந்திருந்து விட்டு
அடுத்த இடம் நோக்கி பயணிக்கின்றோம்
|
Post a Comment