சார்கி
படாவலி
கோட்டை நம் கண்ணுக்குத் தெரிகிறது. குழந்தைகள்
அதற்கு முன்னாலிருந்த புல் தரைகளில் தங்களது காலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த நிகழ் தாண்டி கோட்டைக்குள் புகுகின்றேன். வாசலில் இரு சிங்கங்கள் வரவேற்க இருபது
படிகளின் மேலேறி 10ஆம் நூற்றாண்டில் கோவிலாக இருந்து கோகட் ரானாவால் 19ஆம் நூற்றாண்டில்
கோட்டையாக மாற்றப்பட்ட அதன் நுழைவாயில் தாண்டிய
மண்டபம் இராமாயண, மகாபாரத, காலகட்டங்களையும் சிற்ப வடிவில் தந்து நம்மை அதற்கப்பாலும்
இழுத்துச் செல்கிறது. பல இடங்களில் இராமாயண மகாபாரத சிற்பங்கள் இருந்தாலும் இது ஏதோ
ஒன்று வித்தியாசமாக நமை ஈர்க்கின்றது. ஒட்டு மொத்த சிற்பக் கூட்டத்திற்குள் சிற்சில
இராமாயண மகாபாரத சம்பவங்கள் தூக்கலாக வடிக்கப்பட்டிருந்தன. அதை விட ஆச்சரியமாக, துயரம்,
அழுகையுமான கோர முகக்கள் இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்தது. வியப்பாக
இருந்தது. கைடு அதை ராட்சகர்கள் என்றார். அந்த முகத்தில்
ராட்சதத் தன்மை இல்லை. பரிதாபமும் ஏழ்மையும், அல்லது துறவுமாகவே எலும்பும் தோலுமாக
காட்சி தந்தது. இப்பொழுது கோட்டையாக மாற்றப்பட்டிருக்கின்ற இதில் கோவில்களின் சிதைக்கப்பட்ட,
சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த கற்கள் மாற்றி மாற்றி அடுக்கப்பட்டு கோட்டையாக்கப்பட்டிருக்கின்றது.
கலைத்து போட்டு முறையற்று அடுக்கப்பட்டது தெரிகிறது. நடைபாதையாகவும் --- பல கற்கள்
கோவில் அதாவது கர்ப்ப கிரகம் தரை மட்டமாக்கப்பட்டு விட்டது. இன்னொரு வாசல் அமைத்து
குதிரைகள் இறங்க சறுக்குத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதினிலும் வேலைப்பாடுள்ள கற்கள்,
பாதாளக் கிணறு அதற்குள் போவதற்குப் பாதை எல்லாமே சரியான திட்டமிடல் படியினில் மீன்
சின்னம். கோட்டையாக்கப்பட்டு பிறகு பயன்படுத்தப்பட்ட கற்குண்டுகள் கோவிலுருந்து எல்லா
மழைநீரும் சேகரமாக கூடிய இன்னுமொரு கிணறு பார்த்து விட்டு வெளியே வருகின்றேன். என்
காரில் இன்னுமொரு ஆள் யோசனையோடு ஏன் இந்த ஆள் காரில் என்று எண்ணியபடி ஏறுகிறேன்.
|
Post a Comment