சூரியாள்

Saturday, March 06, 2021

காரைக்கால் அம்மையோடு உறங்குபவள்


 காரைக்கால் அம்மையே

பேயாய் அலையும் உன்னை

கட்டிக் கொண்டு உறங்குகிறேன்


இரு மாங்கனி பெற்ற 

தேவதையை கையேந்த முடியாது

நழுவவிட்ட பரமதத்தனாய்

இங்கும் ஏகப் பட்ட பரமதத்தன்கள்


பரமதத்தன் நழுவ விட்டதற்கு 

பேயாய் மாறிப் போன புனிதவதிகள்


யாருக்காகவும் சதை உருகாது

ஆளுமையின் சுவையில்

மாங்கனிகள் பெற்றவளே


காதலிக்காத பரம தத்தன்களுக்காகவும்

அணைத்திடாத சிவனுக்கும்

ஏன் தலைகீழாய் நடக்கிறாய்


உன் மாங்கனிகளை

கடற்கரை காற்றில்

உயிர்த்தபடி  பெறுகிறேன்

தொலையட்டும் பேய் வாழ்வு

சுவைக்கட்டும் காதலும் காமமும்


posted by mathibama.blogspot.com @ 3/06/2021 11:47:00 am   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates