காரைக்கால் அம்மையோடு உறங்குபவள்
காரைக்கால் அம்மையே பேயாய் அலையும் உன்னை கட்டிக் கொண்டு உறங்குகிறேன்
இரு மாங்கனி பெற்ற தேவதையை கையேந்த முடியாது நழுவவிட்ட பரமதத்தனாய் இங்கும் ஏகப் பட்ட பரமதத்தன்கள்
பரமதத்தன் நழுவ விட்டதற்கு பேயாய் மாறிப் போன புனிதவதிகள்
யாருக்காகவும் சதை உருகாது ஆளுமையின் சுவையில் மாங்கனிகள் பெற்றவளே
காதலிக்காத பரம தத்தன்களுக்காகவும் அணைத்திடாத சிவனுக்கும் ஏன் தலைகீழாய் நடக்கிறாய்
உன் மாங்கனிகளை கடற்கரை காற்றில் உயிர்த்தபடி பெறுகிறேன் தொலையட்டும் பேய் வாழ்வு சுவைக்கட்டும் காதலும் காமமும்
|