சூரியாள்

Thursday, October 09, 2014
இராஜஸ்தான் பயணம் 3
அங்கிருந்து அதை எட்டி நகன்டால் கோட்டைச் சுவர் நீளப் போகின்றது. சுற்றுலாப்பயணிகள் போகிற திசைவழி நடந்து போக பள்ளத்தை நோக்கி அழைத்துப் போகின்றது. படியிறங்கிப் போனால் பள்ளத்தில் பச்சைத் தண்ணீர் நிறைந்து இருக்கின்றது. அந்தத் தேக்கத்திற்கு சிறிய ஊத்து ஒன்றுதான் ஆதாரமாக இருக்கின்றது.  ஜனங்கள் அந்த சலசலவென்று ஓடும் ஊத்தில் தொட்டு வணங்கி கண்களில் ஒத்திக் கொண்டு நகல்கின்றனர்.
கோவிலில் பூஜைகள் செய்ய வயதான பெண்மனி இருக்கின்றார். அவர் கையால் கல்கண்டு வாங்கிக் கொண்டு திரும்பி வந்தேன். தொடர்ந்து இடிபாடுகளுக்கிடை இருந்த கட்டிடங்களை கடந்து போக, வழியில் ஒரு தாமரைக் குளம் நீரும் பூவும் நிறைந்திருந்த அந்தக் குளத்தில் தான் 3000 பெண்கள் ராணி பத்மினியோடு தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இடமிது நாட்டின் மானம், மண்ணின் இருப்பு, மன்னவனின் வெற்றி, கனவனின் ஆண்மை, 
ராணி பத்மினி பற்றி பலவித கதைகள் உலவிக் கொண்டிருக்கின்றது. அவள் பேரழகி அதிலும் அறிவானவள், ஆண்மையானவள், சிங்கள அரசனின் மகள், ராஜபுத்திர வீரனை மணந்தவள். அழகிய பேசும் கிளிக்கு சொந்தக்காரி. 3000 பெண்களோடு தீயில் விழுந்தாள் இன்று அந்த இடம் நீராலும் பூக்களாலும் குளிர்ந்து கிடக்கின்றது.
ஒட்டுமொத்த நினைவுகளும் ஆழ்மனதை  புனைவுக்குள் தள்ளி காலியாய் கிடந்த அரண்மனையை தீயில் குதித்த 3000 பெண்களின் ஆன்மாக்களோடு சுற்றிவரச் செய்கின்றது.

பத்மினியின் அரண்மனையை சுற்றி வந்து விட்டு வெளியே வந்தால் கோட்டையின் சூரிய வாசலை சந்திக்க முடிந்தது. நாலு திசைகளிலும் நாலு வாயில்கள் சூரிய, சந்திர பெயர்களில் விளங்குகின்றன. சுற்றி வர முடியாமல் எல்லா வாயில்களையும் பார்த்துவர சாத்தியமில்லாமல் போகின்றது. மிகப் பெரிய இடம், வெயிலும், தூரமும் வசக்கிவிடுகின்றது. தண்ணீரை துணைக்கழைத்துக் கொண்டு திரும்புகின்றேன். வழியெங்கும் பாபா நாம் தேவ் கோவிலுக்கு போகும் யாத்திரிகளின் தீவிரம் ஒரு புறம் என் கவனத்தை ஈர்க்க, அவர்கள் கூடாரங்களை ஏக்கத்தோடு பார்த்தபடியே திரும்புகின்றேன் உதய்பூருக்கு.





posted by mathibama.blogspot.com @ 10/09/2014 06:00:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates