சூரியாள்

Friday, February 08, 2008
நிஜங்களின் மூடு திரைகள்-கவிதை

நிஜங்களின் மூடு திரைகள்
திலகபாமா

தென்னாடுடைய சிவனார்க்கு
மாதவிலக்கான பெண்கள்
ஆனாலென்ன
ஆகாமல் போனாலென்ன

கயிலையின் குளிர் நுனி
எங்கள் பாதமுரசிய பிறகு

வெள்ளாமைக் கடையாளமென்று
தலைவழி தண்ணீரூற்றி
தீச்சட்டி எடுக்க வைத்த
பாட்டியின் சுருக்குப் பைக்குள்
சுத்தமும் பகுத்தறிவும்

கருவறையே நானாகிய பிறகு
கோவில் கருவறைக்கு
பகுத்தறிவு பாசறைகளின் போராட்டங்கள்
நிஜங்களின் மூடுதிரைகளோடு

கருவறை தாண்டி
சமையலறை கடந்து
கூடங்கள் மறுத்து
தாண்டிய படிகள்
உயர்த்துவதாக மாறப் போகின்ற
தருணத்தில்
பாதைகளை படுக்கையறைக்குள்
சுதந்திரமென்று சுற்றி விடும்
சூட்சும சாணக்கியங்கள்
தோற்றுப் போக

காலம் காலமாய் வேர் விட்ட
கட்டிலின் கால்கள்
மண்ணோடு சிறையிருந்த போதும்
கிளைகளில் கூடு கட்டி
சிறகுகள் வந்த பின்
வானத்தை இருப்பாக்கும் கிளிகளாக

கட்டிலோடு சிறைப்பிடிக்க
வலைகள் விரிக்கும்
நரித்தனங்களையும்
உறிஞ்சி பச்சையங்களாய்
மாற்றிப் போடட்டும் வேர்களினி
posted by mathibama.blogspot.com @ 2/08/2008 06:56:00 pm  
1 Comments:
  • At Saturday, February 09, 2008 12:47:00 pm, Blogger நித்யன் said…

    சிவகாசியைச் சேர்ந்த சூரியாளுக்கு...

    வார்த்தைகளை சிக்கனப்படுத்தி, வாசிப்பவரை சிறைப்படுத்தும் வசியம் உங்கள் வார்த்தைகளுக்கு அதிகமாகவே உள்ளது.

    // கட்டிலோடு சிறைப்பிடிக்க
    வலைகள் விரிக்கும்
    நரித்தனங்களையும்
    உறிஞ்சி பச்சையங்களாய்
    மாற்றிப் போடட்டும் வேர்களினி //
    இந்த வார்த்தைகளின் சூட்டிற்காகவே உங்களுக்கு “சிவகாசி சரவெடி” என்ற பட்டம் வழங்குகிறேன்.

    புரட்சிக்கு வாழ்த்துக்கள்

     

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates