சூரியாள்

Wednesday, February 07, 2007
கவிதை-

இன்னுமொரு கிருஸ்துமஸ்


நதியோடு பயணிக்க
கடல் வந்து சேர்ந்தது
கடலோடு பயணிக்க
கண்டங்கள் கண்டடைந்தேன்
கண்டங்கள் சுற்றி வர
உலகம் புள்ளியாக
பெரிதாக்கும் முயற்சியில்
சின்னதாவது ஒன்றே சாத்தியமாக
காற்றில் கலந்த துகளாய்
உயிர்மாற கற்றுக் கொள்கிறேன்

அசைவற்ற வார்த்தைகள்
சலனமற்ற ஆடல்கள்
காட்சிகளுமற்ற பார்வைகள்
எல்லாவற்றிலும் உயிர் பற்றி
எப்பவும் எரியும் கலை
தினமும் எல்லாவற்றையும்
கர்ப்பத்திலிருந்து காலவெளிக்கு
பரிசளித்துப் போகின்றது
கல்லறைகளை காலாவதியாக்கி

மரித்துப் போன இறப்புகளிலிருந்து
தேவ குமாரத்தியாய் பிறப்பெடுக்கின்றேன்
பழைய உலகம் அதிசயிக்க
posted by mathibama.blogspot.com @ 2/07/2007 09:05:00 pm  
1 Comments:
  • At Sunday, February 11, 2007 10:05:00 am, Blogger ரத்தினகிரி said…

    கவிதை அருமையாய் இருக்கின்றது சகோதரி!

    நேரம் இருந்தால் http://www.muthamilmantram.com இங்கும் வந்து உங்கள் கவிதைகளை இடுங்கள்!

    அன்புடன்,
    ரத்தினகிரி.

     

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates