சூரியாள்

Wednesday, January 10, 2007
கூர் பச்சையங்கள் தொகுப்பிலிருந்து
அகத்தியம்

இல்லாத திட்டமிடுதல்களுடன்
சம்பவித்து விடுகின்ற பரிமாற்றங்கள்
உரைத்து உடைத்து விட
தேவைப்படாத மன எழுச்சிகள்
உறை பனியாய் முனை நீட்டி
ஆழநீரோட்டத்தோடு நகழ
நானும் தராமல்

நீயும் எடுக்காமல்
கடந்து செல்கின்ற நிமிடங்களில்
நடந்து விடுகின்ற கலப்புகள்

காற்றோடு கலந்து விடும் ஈரநீரா
நீரின் ஈரமொடு கலந்த காற்றா
இரண்டும் தொலைந்து
தென்றலாகிப் போக

இலக்கணத்துளிறுகக்
கட்டிவிட முடியாத ஒன்று
புரிய வைக்கத் தேவையில்லாத
புரிந்துணர்வுக்கு
எழுதிப் போகும் புதிய
அகத்தியத்தை
posted by mathibama.blogspot.com @ 1/10/2007 11:27:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates