சூரியாள்

Tuesday, August 28, 2007
நீர்க் குமிழிகள்
நீர்க் குமிழிகள்
திலகபாமா


உடைபடாத நீர்க்குமிழிகள்
என்னோடு எப்பவும்
அருகின் வேராய்
தூரிலிருந்து துளிர்க்கின்றன


சுட்டு விரல் நுனியில்
கண்ணன் தூக்கிய
மலைக் குடையாய்
குமிழியின் உள்ளே
சிறுதுளிகள்மோதிக்
கரைய விடாது காக்க
மலைகள் சுமந்த படி

சுமந்த சுமைகளை
உணர்த்தாத படிக்கும்
உணராத படிக்கும்
நீரின் மேலில்
நிமிர்ந்த படி உலாவர
தோன்றி மறையும்
குமிழிகளை
பலமில்லாததொன்றாய்
சொல்லிப் போகின்றது காற்று

தாரகை சிற்றிதழில் வெளி வந்தது
posted by mathibama.blogspot.com @ 8/28/2007 11:05:00 am  
1 Comments:
  • At Wednesday, August 29, 2007 12:05:00 pm, Blogger maruthamooran said…

    வணக்கம் சூரியாள்(அக்கா),
    புது விதத்தில் புதிதாய் இருக்கின்றது, உங்களின் கவிதை…
    பணிதொடர வாழ்த்துக்கள்.. நீர்க்குமிழிகள் நிரந்தமற்றவையே…..

     

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates