சூரியாள்

Sunday, June 18, 2006
டார்ஜிலிங் பயணம்-3


4மணி நேர பயணத்திற்கு பின் காங்டாக் நகரை அடைந்தோம். மலைப் பிரதேசங்களுக்கே உரிய நெரிசலான சந்துகள் , அடுக்கடுக்கான வீடுகள் ஆனாலும் சுத்தமான காற்றும் இயற்கை சூழலும் நெகிழ்வைத் தர, மெல்லிய ரசிக்கக் கூடிய குளிர் எங்களை போர்த்திக் கொண்டது. அசைவ உணவு இருக்குமா என்று விடுதியில் கேட்க , மதராசிலிருந்து 40 பேர்கள் வந்திருக்கிறார்கள் அவர்களுக்கு அசைவம் இருக்கக் கூடாது என்றார்கள் அதனால் நாளை அவர்கள் போன பின்பு சமைத்து தருகிறோம் என்றார்கள்.
டார்ஜிலிங் பயணத்தில் , டார்ஜிலிங்கை விட எல்லா இடங்களும் கொள்ளை அழகு. அதிலும் காங்டாக் தான் அதன் முத்திரை பதித்த இடம். பயணத்தின் கடைசி தினங்களில் டார்ஜிலிங் போக திட்டமிடுவது தான் சுகம்.
காலையில் கிளம்பி சங்கு ஏரி(tsomgo lake,/changu lake )போனோம். காங்டாக் நகரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில்,. ஏரியிலிருந்து 17 கிலாமீட்டர் தொலைவில் சீன எல்லையான நாதெல்லா. எல்லையோரம் இருக்கின்ற ஏரியானதால் அந்த பகுதி முழுக்க பொதுமக்களைவிட அதிகமான அளவில் இராணுவ ஆட்களும் அவர்களது வசிப்பிடமும் தான் இருக்கின்றது. வெறும் தகரம் மூங்கிலிலாலான வீடுகள் , எப்படித்தான் குளிர்தாங்குமோ? உயர் மலைகள் பனி மூடிய சிகரங்கள் தரையோடு கொஞ்சிய படி ஓடும் நதி , மலையை குளிருக்கு போர்த்த தரையிறங்கும்பஞ்சுப் பொதி மேகங்கள்குளிரை என் மேல் வீசியெறியும் காற்று.
ஏரிக்கு அருகே கடைகளில் குளிருக்கான ஆடைகள் வாடகைக்கு எடுத்து போட்டுக் கொண்டு காட்டெருமைகள்(yak) மேலேறி ஏரியை ஒட்டியிருக்கும் ஒத்தையடிப் பாதையில் பனி மூடிய சிகரத்தை நோக்கி போகின்றோம்.” கணவர் வரவில்லை? அவரோடு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என அவர்கள் சொல்லிக் கொண்டு போக, சிரித்து கேள்வியையும் பதிலையும் நிராகரித்து பனிக்குள் கால் பதிக்கின்றோம். பனியில் சறுக்கி , உருண்டு குளிர் பற்றிக் கொண்ட பிறகுதான் வேறுவழியின்றி பனி நிறைந்த தரை விட்டு நகலுகின்றோம்.


posted by mathibama.blogspot.com @ 6/18/2006 11:29:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates