சூரியாள்

Thursday, June 22, 2006
டார்ஜிலிங் பயணம்-4

உடன் வந்த ஒட்டுநர்களுடன், பெல்லிங் எதிரே தெரிகின்ற மலையின் உச்சியில்

மலையிறங்கி மலையேறும் பாதை

டாஷி வியூ பாயிண்ட்


கணேஷ் டோக்

ஹனுமான் டோக்

வானுக்கடியிலிருக்கும் எல்லாமே மலைகள் தான் எனத் தோற்றம் தரும் இமயமலைத் தொடர்ச்சிகளிடையே பார்க்க வேண்டிய இடங்களாக அங்கிருக்கும் பயண முகவர்கள் நமக்குத் தருவது , வீழுகின்ற அருவிகளையும் மலைசிகரங்கள் வான் முட்டும் காட்சியையும்,கிடு கிடு பள்ளத்தாக்குகளையும் . அவர்களிடம் எப்பவும் இருக்கின்ற ஒரு பட்டியல், 5 இடங்கள் 10 இடங்கள் என.500 ரூபாயிலிருந்து 1000 வரை. எண்ணிக்கை அதிகம் சொல்லிப் போவார்கள் ஆனால் பெரும்பாலும் எல்லாமே போகின்ற வழியிலும் திரும்புகின்ற வழியிலும் இருப்பதாகவே இருக்கும். சுற்றுலா பயணிகளை கவருகின்ற வார்த்தைகள் அது.
ஒவ்வொரு மலை உச்சியிலும் ஒரு கோவில் இருகின்றது. அனுமான் டோக், கணேஷ் டோக், என்று மலையின் உச்சிகளை கடவுளர்கள் ஆக்கிரமித்திருக்க. கோவில்கள் எல்லாம் சிறிய கோவில்கள் தான்.ஆனால் அழகிய காட்சிகள். கண்ணுக்கு விருந்தாகும் இயற்கை சூழல்.
“கணேஷ் டோக்” கில் ஒரு ஓட்டுநர் நானும் என் குழந்தைகளும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு மதராசியா என்கிறார். ஆம் என்கிறோம் எனக்கு “ கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும் என்கிறார்.வணக்கம்.வாங்க சாப்பாடு என்று சொல்லி விட்டு இன்னொரு நல்ல வாக்கியம் தெரியும் என்று ஹிந்தியில் சொல்லி விட்டு” நான் உன்னை காதலிக்கின்றேன் “ என்று சொல்ல , அதை சொல்ல மொழி தேவையில்லையே என்று சொல்லி பேசிய தமிழுக்கு வாழ்த்தி கை குலுக்கி விட்டு நகலுகின்றோம்.
டாஷி வியூ பாயிண்ட் (tashi view point)வந்து சேர்கின்றோம் நாங்கள் வந்தது மத்தியானப் பொழுது. விடியற்காலை 5 மணிக்கு இங்கு வந்தால் கஞ்சன் ஜங்காமுனை பார்க்கலாமாம். அதேபோல் அங்கிருந்து சுற்றிப் பார்க்க ஹெலிகாப்டர் வசதியும் இருக்கின்றது. அது அதிக பட்ச தொகையாக இருக்கின்றது. நமக்கு கட்டு படியாகாது என்று வானில் அது பறப்பதை வேடிக்கை பார்த்து விட்டு அறைக்கு வந்து சேர்கின்றோம்.

இன்று தேர்தல் நாள்.8.5.06 காலை கொளம்பி காங்டாக் விட்டு வெளியேறி குவிந்து கிடக்கும் மலைச் சிகரங்களுக்கிடையே பயணித்து பெல்லிங்(pelling) நோக்கி பயணமாகின்றோம். மாருதி வேனும், ஜீப் போன்ற வாகனங்கள் மட்டுமே போகக் கூடிய பாதைஒரு மலையில் உச்சியிலிருந்து நாங்கள் போய்க் கொண்டிருக்கின்ற பெல்லிங் எதிர்த்திருக்கும் மலையின் உச்சியிலிருக்கிறது என அடையாளம் காண்பிக்கின்றார்கள் நம்ப முடியாத மலையின் பிரம்மாண்டம் வியப்பூட்டுகின்றது.வண்டி ஓட்டி வருவது எல்லாமே 19 20 வயதுள்ல சிறிய பையன்கள் தான் .ஆனால் நல்ல அனுபவ சாலிகள் ஓடுவதில். ஒரு மலையிலிருந்து இறங்கி எங்களது வாகனம் அடுத்த மலையுச்சியை வந்தடைகின்றது 2.15 க்கு பெல்லிங் வந்து சேர்க்கின்றோம் சிறிய கிராமம்.காலார நடக்கத் துவங்கியதுமே ஊர் முடிந்து விடுகின்றது. விடுதிக்குள் நுழைந்ததுமே மெல்லிய துண்டு ஒன்று கழுத்தில் இட்டு வரவேற்கின்றார்கள்.அந்த துணியில் புத்த மதத்துக்கான சக்கரங்கள் இருக்கின்றன. அந்த துண்டு வளம் கொண்டு வரும் என்று நம்புகின்றனர். கதவுகளில் வாசல் நிலைப்படிகளில் எல்லாம் அதை கட்டி வைத்திருக்கின்றனர்.
posted by mathibama.blogspot.com @ 6/22/2006 11:36:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates