சூரியாள்

Saturday, May 09, 2009
படித்ததில் பிடித்தது
கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்திலும் சரி அரசியலிலும் சரி வெறும் உணர்ச்சி வசப் பட்டு பேசக் கூடியவர்களும் எழுதக் கூடியவர்களும் துணிச்சல் மிக்கவர்களாக சொல்லப் பட்டு சொல்லப் பட்டு ஆழ்ந்த சிந்தனை உள்ள கருத்துக்களும் அறிவு பூர்வமான தீர்வுகளும் மௌன அங்கீகரிப்புகளூடவே மறைந்து அல்லது மறக்கப் பட்டு விடுவதும் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றது. அதையெல்லாம் மீறி மிக அரிதாக மிக குறுகிய எல்லைகளுக்குள் கருத்துக்களையும் தங்களையும் சிக்க விடாமல், மனிதனாகக் பிறந்தவன் வாழப் பிறந்தவன் தேச , இன, சாதி, மத, பால் வேறுபாடுகளைத் தாண்டியும், என்பதை கருத்தில் ஊன்றி குறுகிய காலத் தீர்வாக அல்லாது நீண்ட காலத் தீர்வுகளையும் நோக்கி சிந்திப்பவர்களின் கருத்துக்கள் வெளி வரத் துவங்கியிருக்கின்றன. உண்மையில் இவைதான் மிகத் துணிச்சலானவை.வெற்று ஆர்ப்பாட்ட குரல்கள் துணிச்சலான கலகக் குரல்களாக பார்க்கின்ற மனோநிலை, தலித்தியம் பெண்மொழி, இலங்கை அரசியல் எல்லாவற்றினுள்ளும் இன்றைக்கு புகுந்து உண்மையான மனித விடுதலையை நோக்கி நகர்தலை தடுத்து விடுகின்றது.அதைத் தாண்டி மிக அரிதாக வெளி வருகின்ற சிந்தனைகளாக புது விசையில் வந்திருக்கின்ற சுசீந்திரனின் நேர்காணல் பேசி பகிர்ந்து கொண்டு பலருக்கும் கடத்த வேண்டிய முக்கிய நேர்காணல்.

"மன்னிக்க வேண்டும், நம்பிக்கையூட்டும் கருத்து ஒன்றையேனும் என்னால் சொல்ல முடியவில்லை..."

-நடராசா சுசீந்திரன்


பல இணைய தளங்களும் இந்நேர்காணலை பிரசுரித்திருக்கின்றன. அவற்றுக்கும் எனது நன்றிகள்
நேர்காணலை வாசிக்க:


Labels:

posted by mathibama.blogspot.com @ 5/09/2009 07:22:00 am  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates