சூரியாள்

Wednesday, September 26, 2007
அழைப்பிதழ்


பாரதி இலக்கியச் சங்கம் நடத்தும்
சௌந்திரபாண்டியனார் அரங்கம்
இலக்கிய சந்திப்பு
நாள் 6.10.07சனிக் கிழமை, காலை 9 மணி
இடம் :எஸ்.எம்.கே.எஸ்.கல்யாணமண்டபம், பட்டிவீரன் பட்டி
வரவேற்புரை: திரு என். ரவிச்சந்திரன்
தலைமை : திரு டி.மோஹன் அருணாச்சலம்
முன்னிலை: திரு ஏ.நாகராஜன்
திரு.ஆர்.முரளி
சிறப்புரை : எழுத்தாளர் பொன்னீலன்
சி. கனகசபாபதி நினைவுப் பரிசளிப்பு
வழங்குபவர் : லட்சுமி அம்மாள்
விமரிசன உரை:கவிஞர் முல்லை நடவரசு
ஏற்புரை :கவிஞர் அம்சபிரியா
:கவிஞர் அமிர்தம் சூர்யா
கவிச்சரம் : திருமதி, நளினி, மற்றும்
நா.சு.வி.வி பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள்
வைகை செல்வியின் நூல் வெளியீடு
" இன்னொரு உலகில்...
இன்னொரு மாலையில்..."
வெளியிடுபவர்:திருமதி பொ.நா.கமலா
பெறுபவர் : கவிஞர்: ரெங்கநாயகி
பரிசு வழங்குபவர்: எம்.சௌந்திரபாண்டியன்
நன்றியுரை : திலகபாமா
மண்ணின் பாடல்களுடன் இராசை உமா சங்கர்
posted by mathibama.blogspot.com @ 9/26/2007 09:27:00 pm   1 comments
Tuesday, September 25, 2007
கூந்தல் நதிக் கதைகள்

ூந்தல் நதிக் கதைகள் நூல் வெளியீட்டின் ஒளிப்பதிவு காணhttp://www.sangamamlive.com/

posted by mathibama.blogspot.com @ 9/25/2007 11:23:00 pm   0 comments
Wednesday, September 12, 2007
சங்கமம் வலைப் பதிவு
http://www.sangamamlive.com/
posted by mathibama.blogspot.com @ 9/12/2007 10:01:00 pm   0 comments
Sunday, September 09, 2007
செம்போத்து கூடு வேர்கள்

அம்ருதா இதழில் வெளி வந்த கவிதைகள்



செம்போத்துக் கூடு வேர்கள்


சிரிப்பொலிகள்
வருத்தங்களின் அழுத்தங்களிலிருந்து
பீறிட்டுக் கிளம்புகின்றன


ஒலிகளின் பின்னால்
மறைந்திருக்கும்
என் காயப் பட்ட மனமும்
உனைக் காயப் படுத்த விரும்பா நினைவும்


நீ என்னோடு இருக்க
விரும்புவதை நான்
தேடி வந்து சாத்தியமாக்க
என்னோடிருந்ததை மறைக்க
விரும்பி
பச்சையமில்லா மொட்டை பாறைகளில்
அலைந்து நீ திரிய
காடுகளின்
செம்போத்து பறவைக் கூடாய்
கூட்டில் கிடந்த அரிய வேராய்
புனைவினோடு மறைந்து
திரிகின்றது நம் நெருக்கங்கள்

மொட்டை பாறைகளின்
நிர்வாணங்களை
கடல் கடந்து காட்சிப் படுத்திட
இருளின் குளிரில்
நிலவின் வெளிச்சப் பிண்ணனியில்
சுவைத்த சுகத்தை
சொல்ல முடியாது மூடி வைக்க
நிர்வாணங்கள்
நிர்வாணமாகிக் கூசுகின்றன.

உன் கண்களின் பொய் ஒளியின்
முன் நின்றதற்காக

*************************************
போரா குகைகள்

எவ்வளவு புரியும் படி
உன் தூண்டிகள்
இருக்கும் போது
புரியாத ஒன்றாகவே
காட்டிக் கொண்டு
கடந்து போகின்றேன்

சாதுர்யங்களோடு நீ நிகழ்த்தும் போதும்
புரிந்த மேதமைகளை
புரியாத அறியாமை
போர்வையிலேயே
உலாவர விடுகின்றேன்

காலத்தின் அதிசயமாய்
எனக்குள் உறைகின்றன
நீர் தின்று
குகைகள் தோன்றும்
பிரம்மாண்டம்

பூவிட்டு குங்கும பொட்டிட்டு
சங்கு ஊதி
இருளின் குளிரை
தூபப் புகையால்
நிரவ விட்டு
தட்சணைக் காசுகளுக்குள்
திகைப்புகளை
தொலைத்து விட்டு
காற்றில் மிதந்து போகின்றாய்
சருகாக
posted by mathibama.blogspot.com @ 9/09/2007 12:16:00 pm   2 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates