சூரியாள்

Sunday, August 28, 2011
பேச மறந்த சில குறிப்புகள்


திலகபாமா

தூக்கிப் போட்ட சிகரெட்டுக்காக

கைதட்டத் துவங்கியதிலிருந்து

ஊழலுக்கெதிராக போராடுபவர்களை

நிராகரிக்கவும்

குற்றங்களுக்கெதிரான தண்டனைகளை

தவிர்த்துவிடபோராடவும்

தானே கற்றுக் கொள்ளுகிறது

பின்னவீனத்துவ சமூகக் குழந்தை

இனப்பற்றுக் கான போராட்ட அடையாளம்

மொழியைக் காப்பாற்றுவதில் தொடங்கி

குற்றங்களுக்காதரவாக

போராடுவது வரை நீளுகின்றது.

உணர்வாளர்களை அறிவுத் தளத்தில் யோசிக்க விடாமலிருப்பதை முன்பெல்லாம் இந்தியாவை வெல்ல நினைத்தவர்கள் செய்தார்கள். இப்பொழுது நாமே நமக்கு சூன்யம் வைத்துக் கொள்கின்றோம்

பாவம் இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்

தனித்த அடையாளங்களுக்காக பொதுமை நியாயங்களை நிராகரிப்பவர்கள்

posted by mathibama.blogspot.com @ 8/28/2011 10:21:00 am   0 comments
Tuesday, August 09, 2011
தொடக்க விழா


Labels:

posted by mathibama.blogspot.com @ 8/09/2011 08:54:00 pm   0 comments
நிகழ்ச்சி நிரல்




Labels:

posted by mathibama.blogspot.com @ 8/09/2011 08:46:00 pm   0 comments
இலக்கிய மாநாடு 11

பாரதி இலக்கிய சங்கமும்

காளீஸ்வரி கல்லூரி யும் இணைந்து நடத்தும்

இலக்கிய மாநாடு 11

இடம் காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி

2 நாட்கள்

4 அரங்குகள்

20 அமர்வுகள்

35 படைப்பாளிகள்

50 ஆய்வுக் கட்டுரைகள்

செப்டம்பர் 9,10

பொன்னீலன் அரங்கு - படைப்பு வெளி

லட்சுமிஅம்மாள் அரங்கு - பெண்கள் இலக்கியம்

டொமினிக் ஜீவா அரங்கு - ஈழ, புலம்பெயர்,புகலிட இலக்கியம்

குற்றாலம் ஆர்ட்டிஸ்ட் அரங்கு- இலக்கியமும் கலையும்

கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிறுகதை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், நாவலாசிரியர்கள், விமரிசகர்கள் நாடக இயக்குநர்கள், ஓவியர்கள், இசை வல்லுநர்கள், கிராமியக் கலை வல்லுநர்கள், ஆய்வாளர்கள்,வாசக அன்பர்கள்

நேற்றைய தடங்கள், இன்றைய கேள்விகள், நாளைய எதிர்பார்ப்புகள், வரை படங்கள் அழித்த இலக்கியங்கள், பெண்ணின் பெருவெளிகள், நூல் அறிமுகங்கள், கலந்துரையாடல்கள், கலைகளின் வாசிப்பில் வாழ்வு.....இன்னும் இன்னுமாக

தமிழனின் சிந்தனைத் தளத்தின் அடுத்த நகர்வுக்கு அடிகோலும் இலக்கிய மாநாட்டில் உங்களது பதிவும் இடம்பெற அழைக்கின்றோம்.

மாணவ, மாணவிகள் தங்குமிட வசதி கல்லூரியிலேயே செய்து தரப் படும்.

பங்கு பெற விரும்பும் இலக்கிய அன்பர்கள் முன்பதிவு செய்வது தங்குமிட உணவு ஏற்பாட்டிற்கு உதவும்

முன்பதிவு செய்ய

திலகபாமா

2/3136/8 பெருமாள் நகர்

விஸ்வநத்தம்

சிவகாசி

Labels:

posted by mathibama.blogspot.com @ 8/09/2011 08:43:00 pm   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates