
நிஜங்களின் மூடு திரைகள் திலகபாமா
தென்னாடுடைய சிவனார்க்கு மாதவிலக்கான பெண்கள் ஆனாலென்ன ஆகாமல் போனாலென்ன
கயிலையின் குளிர் நுனி எங்கள் பாதமுரசிய பிறகு
வெள்ளாமைக் கடையாளமென்று தலைவழி தண்ணீரூற்றி தீச்சட்டி எடுக்க வைத்த பாட்டியின் சுருக்குப் பைக்குள் சுத்தமும் பகுத்தறிவும்
கருவறையே நானாகிய பிறகு கோவில் கருவறைக்கு பகுத்தறிவு பாசறைகளின் போராட்டங்கள் நிஜங்களின் மூடுதிரைகளோடு
கருவறை தாண்டி சமையலறை கடந்து கூடங்கள் மறுத்து தாண்டிய படிகள் உயர்த்துவதாக மாறப் போகின்ற தருணத்தில் பாதைகளை படுக்கையறைக்குள் சுதந்திரமென்று சுற்றி விடும் சூட்சும சாணக்கியங்கள் தோற்றுப் போக
காலம் காலமாய் வேர் விட்ட கட்டிலின் கால்கள் மண்ணோடு சிறையிருந்த போதும் கிளைகளில் கூடு கட்டி சிறகுகள் வந்த பின் வானத்தை இருப்பாக்கும் கிளிகளாக
கட்டிலோடு சிறைப்பிடிக்க வலைகள் விரிக்கும் நரித்தனங்களையும் உறிஞ்சி பச்சையங்களாய் மாற்றிப் போடட்டும் வேர்களினி |