சூரியாள்

Tuesday, July 24, 2007
தொலையும் கருவேல நிழல்கள்

தொலையும் கருவேல நிழல்கள்

காலடித் தடங்கள்
தேடிச் சுவைக்கிறேன்
காற்றின் ஒளியை
குடித்து முடிக்கின்றேன்
காதலிக்கப் படுவதாய்
நினைக்கையில் எல்லாம்

ஈரம் கசிகின்ற
வார்த்தைகள்
கனக்கின்றன நெஞ்சத்தில்
சுகமாய்

கூடுகள் சமைத்து
குலவிய முட்டைகள்
மகிழ்ந்திருந்தது

தேடி வந்திருந்து
தலைமுறை வாழ்வை பகிர்ந்ததற்காக

நீர்த்தடம் தொலைத்து
கண்மாய் விரிசல் விட்ட நாளில்
துள்ளிய கெழுத்திகள்
மண்ணோடு உறைந்து போக
குச்சிகளால் நிரப்பி
உயிர் மூச்சு
உள்ளடக்கி நிற்க

காற்றைக் குடித்து
காலம் சுமந்து வந்த பறவை
கழுகுப் பார்வையில்
காணாது போன நீர்த்தடத்தில்
கருவேல நிழல் வீழ

நீளப் போகின்றது
தேடி வந்தது கிளைகளை அல்ல
என்றுணர்த்தி

படம், கவிதை திலகபாமா
posted by mathibama.blogspot.com @ 7/24/2007 06:34:00 pm   2 comments
ஓசை செல்லா- ஓவிய விமரிசனம்

நன்றி ஓசை செல்லா
posted by mathibama.blogspot.com @ 7/24/2007 01:00:00 pm   0 comments
Tuesday, July 17, 2007
புகைப்படப் போட்டிக்கு


posted by mathibama.blogspot.com @ 7/17/2007 05:48:00 pm   5 comments
Monday, July 16, 2007
கூசுகின்ற ஒளிகள்

கூசுகின்ற ஒளிகள்
திலகபாமா

சிரிப்பொலிகள்
வருத்தங்களின் அழுத்தங்களிலிருந்து
பீறிட்டு கிளம்புகின்றன

ஒலிகளின் பின்னால்
மறைந்திருக்கும்
என் காயம் பட்ட மனமும்
உனை காயப் படுத்த விரும்பா நினைவும்
நீ என்னோடு இருக்க
விரும்புவதை
நான் தேடி வந்து சாத்தியமாக்க
என்னோடிருந்ததை மறைக்க விரும்பி
பச்சையமில்லா மொட்டை பாறைகளில்
அலைந்து நீ திரிய
காடுகளின் செம்போத்து
பறைவைக் கூடாய்
கூட்டில் கிடந்த அரிய வேராய்
புனைவினோடு திரிகின்றது
நம் நெருக்கங்கள்
மொட்டை பாறைகளின்
நிர்வாணங்களை
கடல் கடந்து
காட்சிப் படுத்திட
இருளின் குளிரில்
நிலவின் வெளிச்சப் பிண்ணனியில்
சுவைத்த சுகத்தை
சொல்ல முடியாது மூடி வைக்க
நிர்வாணங்கள்
நிர்வாணமாகிக் கூசுகின்றன
உன் கண்களின் பொய் ஒளியில்
முன் நின்றதற்காக
(வடக்கு வாசல் இதழில் வெளி வந்த கவிதை)
posted by mathibama.blogspot.com @ 7/16/2007 11:05:00 pm   1 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates