சூரியாள்

Wednesday, August 29, 2007
நூல் வெளியீடு-கூந்தல் நதிக் கதைகள்


காலை 10. 30 மணிக்கு உமா சங்கரின் உற்சாகமான குரலின் இனிமையோடு நிகழ்வு ஆரம்பமானது.வழக்கமான புத்தக வெளியீடாக இல்லாது இந்த நிகழ்வு முற்றும் உணர்வு ரீதியான வெளிப்பாட்டோடு அமைந்திருந்தது, இந்த கவிதை வாசிப்பாக நடைபெற இருக்கின்றது என்று சொன்னவுடன் எதிர் கேள்விகள் இல்லாது மகிழ்ந்த தருமபுரி அரசு கலை கல்லூரியில் பணியாற்றும் கோ. கண்ணன் அவர்களது தலைமையில் இந்த நிகழ்வு தொடங்கியது இந்த கவிதை வாசிப்பை தன்னோடு தொடக்க காலத்திலிருந்து மூன்றாண்டுகளாக உற்சாகத்தோடும் எதிர் பார்போடும் கேட்டிருந்து அதன் வெளியீட்டுக்காக காத்திருந்தவர் லஷ்மி அம்மாள். அவர்களுக்கு தன் முதல் நூலை கையளிப்பதன் மூலமாக தன் அன்பையும் நெகிழ்வையும் காட்ட வேண்டும் என்பதற்காகவே இதுவரை யாருக்கும் நூலை பார்வைக்குத் தராமல் முதல் பிரதியை அவருக்கு இந்த நிகழ்வில் அளிப்பதாக சொன்னார். தொடர்ந்து எழுத்து பயணத்தில் உற்சாகப் படுத்தி வரும் பொன்னீலன் , இந்தக் கவிதையை வாசித்து தன் எண்ண வெளிப்பாடுகளை பகிர்ந்துகொண்ட அமிர்தம் சூரியா, கவிதையோடு எப்பவும் தர்க்கமிட்டு வந்த பா. வெங்கடேசன், அழைப்பிதலில் பெயர் இல்லாமலேயே நிகழ்வுக்கு பார்வையாளர்களாகவே வந்திருந்த பிரம்மராஜன் வெ, எழிலரசு .,இளம் கவி அருள் சோ, தர்மர், தன் கவிதைகளிலிருந்த பாத்திரங்களை உள்வாங்கி நாடகமாக்கிக் கொண்டிருக்கும் விஜயேந்திரா ஆகியோருக்கும் நூலை வழங்கி சிறப்புச் செய்தார்.. அதைத் தொடர்ந்து அவரது கவிதை வாசிப்பு தொடங்கியது. 1.35 மணிநேரம் நிகழ்ந்த அந்த வாசிப்பு அனைவரையும் மனதளவிலும் கூட துளிக்கூட அசைய விடாது கவிதையின் கதையோடும் உணர்வோடும் பயணிக்க வைத்திருந்தது.வாசிப்பு முடிய தொடர்ந்தது கலந்துரையாடல் துவக்கத்தில் அமிர்தம் சூர்யா தன் வாசிப்பில் அநாதி சொரூப கவிதைக்குள் இருக்கும் அக புற கட்டுமான அமைப்பு பற்றியும், தன்னை ஈர்த்த வரிகள் பற்றியும் , முரண்படச் செய்த விவாதங்கள் பற்றியும் பேசினார். பொன்னீலன், எழிலரசு, பா, வெங்கடேசன்,விஜயேந்திரா கவிதை குறித்து தங்கள் எண்ணங்கள பதிவு செய்தார்கள். 3 மணிக்கு நிகழ்வு திலகபாமாவின் நன்றியுரையோடு நிறைவடைந்தது.
இளம் கவி அருள்
பாண்டிச்சேரி
posted by mathibama.blogspot.com @ 8/29/2007 11:27:00 am   0 comments
Tuesday, August 28, 2007
நீர்க் குமிழிகள்
நீர்க் குமிழிகள்
திலகபாமா


உடைபடாத நீர்க்குமிழிகள்
என்னோடு எப்பவும்
அருகின் வேராய்
தூரிலிருந்து துளிர்க்கின்றன


சுட்டு விரல் நுனியில்
கண்ணன் தூக்கிய
மலைக் குடையாய்
குமிழியின் உள்ளே
சிறுதுளிகள்மோதிக்
கரைய விடாது காக்க
மலைகள் சுமந்த படி

சுமந்த சுமைகளை
உணர்த்தாத படிக்கும்
உணராத படிக்கும்
நீரின் மேலில்
நிமிர்ந்த படி உலாவர
தோன்றி மறையும்
குமிழிகளை
பலமில்லாததொன்றாய்
சொல்லிப் போகின்றது காற்று

தாரகை சிற்றிதழில் வெளி வந்தது
posted by mathibama.blogspot.com @ 8/28/2007 11:05:00 am   1 comments
Monday, August 27, 2007
சக்தி விருது
வழக்கறிஞர் சுகுணா தேவி எனக்கு வழங்கிய சக்தி விருது, உடன் சுப்ரபாரதி மணியன்
விருது வாங்கிய ஆண்டாள் பிரிய தர்ஷிணி, இந்திராணி, சாந்த குமாரி ஏற்புரையில்
posted by mathibama.blogspot.com @ 8/27/2007 11:47:00 pm   0 comments
Tuesday, August 07, 2007
அழைப்பிதழ்

posted by mathibama.blogspot.com @ 8/07/2007 08:48:00 am   1 comments
Friday, August 03, 2007

Posted by Picasa
posted by mathibama.blogspot.com @ 8/03/2007 12:14:00 am   0 comments
Wednesday, August 01, 2007
புகைப்படப் போட்டிக்கு


posted by mathibama.blogspot.com @ 8/01/2007 11:26:00 pm   2 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates