சூரியாள்

Sunday, July 31, 2011
தருமிஞான்

தரு மிஞான்

உயிரற்ற உங்கள்

உடல்களின் வாசனையை

உறிஞ்சுகின்ற தருவாய் நான்

காலாவதியாகிப் போன

உடல்கள்

உயிர்க்க திராணியற்று

மக்குகின்றன என்

சுவாசத்தில்

மீந்தும் எலும்புகளை

உன் அதிகப் படியான

விலாவுக்கு சாட்சியாய்

விட்டு வைக்கின்றேன்

பாம்புகள் சொல்லி பழங்களை

ஏவாள்களுக்குத் தரும் ஆதாம்கள்

பைசாகியின் அருள் ஏந்தி

கண்களில் வழியும் காதல் ரசமருந்து

வியர்வைகளற்ற ஆமையும்

தாகமோடிருக்கும் மீன்களும்

கோடுகள் நெளியும் நீரும் நிறைந்த

ஏரி கடக்க

ஓர் இரவின் இறப்பு போதாது

விடியலின் பிறப்பை

நமக்குணர்த்த

Labels:

posted by mathibama.blogspot.com @ 7/31/2011 08:32:00 am   0 comments
Thursday, July 28, 2011
கவிதை

அசமம்

கழுகுத் தன் வானப் பார்வையிலிருந்து

கேள்வி எழுப்பியது.

தட்டையான சமவெளியில்

நேராக போகத் தெரியாத

நதி பற்றிய எள்ளலை

நெளிந்து நெளிந்து போயிருந்த

நதிக்குத் தெரிந்திருந்தது

கழுகுப் பார்வையில்

காணக் கிடைக்காத

மேடு பள்ளங்கள்

தழுவலில் மட்டுமே

புரியக் கூடிய

அசமங்கள் தானென

Labels:

posted by mathibama.blogspot.com @ 7/28/2011 04:26:00 pm   1 comments
Tuesday, July 12, 2011
சூர்ப்பணங்கு- கவிதை

சூர்ப்பணங்கு

திலகபாமா

கண்ணன்

கோபிகைகளின் பாடுகளை

நாடகமாக்க தீர்மானித்தபின்

அத்தெருவிலிருந்த

தாவணிகளும் முலைகளும்

கடன் பெறப் பட்டன

நாடெங்கும் நாடகத்தின்

ஒப்பாரி ஒலித்து எல்லாரும் அழுது

கைதட்டி ஓய்ந்தபின்னும்

தாவணிகள் மீளாததை

பெண்கள் பாமாவிடம் முறையிட்டனர்

யசோதை மறைவுக்குப் பின்னர்

குறைகளைக் கேட்கும் உரிமை

பாமாவுக்கே ஈந்ததாக

மயிர்பீலி நிமிர்த்திய

கண்ணனின் நாடகக் கொட்டகையில்

அவர்களின் துடைப்பங்களும் உலக்கைகளும் கூட

இற்று உலர்வதாக

இரவுகளில் தூக்கமிழந்த பாமாவிடம்

முறையீடுகளோடு போயினர்

நாடக அழுகையின் கைதட்டலில்

பாமாவின் சுமைகளின் பாடுகள்

பிள்ளைகளின் விரல் பற்றலாய்

சுகமாகிய படியே இருக்க

நாடக கோபிகைகளின்

இரவல் முலைகளில்

உண்மையின் தாய்மை

உயிர்த்திருப்பதாக நம்பிய

பார்வையாளர்களின் வீடுகளிலும்

தோள் சீலை இழந்த பெண்கள்

உலாவர

கண்ணனின் காலடிச் சுவட்டின்

திருட்டு வாசத்தை

உணர்ந்த கோபிகைகள்

நாடக அரிதாரங்களில்

மேல் தீ வைக்க

வெடித்து சிதறிய

சுரைக்குடுவைக்குள்ளிருந்து

சூர்ப்பணங்கு எழும்புகிறாள்.

நாடகத்தை தின்றபடிக்கு

Labels:

posted by mathibama.blogspot.com @ 7/12/2011 12:09:00 am   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates